ராட் வீலர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை விற்கவோ, இறக்குமதி செய்யவோ ஒன்றிய அரசு சமீபத்தில் தடை விதித்திருந்தது. மேலும் தடை விதிக்கப்பட்ட 23 நாய் இனங்கள் தற்போது வளர்க் கப்பட்டு வந்தால் கருத்தடை செய்ய வேண்டும் என வும் ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. அரசின் உத்தரவு கருணைக் கொலைக்கு ஈடானது என தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தடைக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.பி., தரம்வீர் காந்தி திங்களன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திங்களன்று வாபஸ் பெற்றார்.
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திங்களன்று வாபஸ் பெற்றார்.
ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக் காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரி வித்துள்ளது.
தேர்தலில் பிரதமர் மோடி “மேட்ச் பிக்ஸிங்” செய்கிறார் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறிய கருத்தை குறிப்பிட்டு, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணை யத்தில் பாஜக திங்களன்று புகார் அளித்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் வடமேற்கு மாவட் டமான ஜல்பைகுரியில் ஞாயிறன்று திடீ ரென கனமழையுடன் புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகா மாநிலம் தும்கூரின் குப்பி தாலுகா வில் டோட்குனி அருகே ஷிவமோகா - பெங்க ளூரு தேசிய நெடுஞ்சாலையில் 90 சதவீதம் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024; செவ்வாயன்று நடைபெறும் 15-ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ - உத்தரப்பிர தேச அணிகள் மோதுகின்றன. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் இந்த ஆட்டம் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
அகமதாபாத்
குஜராத்தில் பாஜக 15 தொகுதிகளை கைப்பற்றுவதே சிரமம்
பிரதமர் மோடியின் சொந்த மாநில மான குஜராத் மாநிலத்தில் மொத் தம் 26 மக்களவை தொகுதிகள் உள்ளன. 26 தொகுதிக்கும் பாஜக வேட் பாளர்களை அறிவித்து உள்ள நிலை யில், மோடி மற்றும் பாஜகவிற்கு எதிரான அதிருப்தி அலையை உணர்ந்து சபர் கந்தா, வதோதரா ஆகிய தொகுதி வேட் பாளர்கள் தங்களுக்கு சீட் வேண்டாம் என ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட் டுள்ள நிலையில், புதிய வேட்பாளர் அறி விப்பிலும் சபர்கந்தா, வதோதரா தொகுதி களில் கோஷ்டிப் பூசல் சண்டைகள் உரு வானது. அதாவது தங்களுக்கு சீட் வேண் டும் என்றும், சீட் கொடுக்கவில்லை என் றால் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என 10க்கும் மேற் பட்ட கோஷ்டிகள் தனித் தனியாக பிரிந் துள்ளனர். இதே போல அம்ரேலி, ராஜ் கோட், சுரேந்திரநகர் உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கோஷ்டிப் பூசல் சண்டையால் பாஜக ஆட்டம் கண்டு வரு கிறது. குஜராத்தில் பாஜகவின் நிலைமை இப்படி உள்ள நிலையில், வர விருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக 15 தொகுதிகளை கைப்பற்றுவது சிரமம் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுதில்லி
ஜெகன்மோகன் சொத்துக் குவிப்பு வழக்கு
சிபிஐயிடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வரு மான ஜெகன் மோகன் மீது உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக கடந்த 2012இல் கைது செய்யப்பட்டார். 16 மாதங்கள் வரை சிறையில் இருந்த ஜெகன் ஜாமீனில் வெளிவந்து ஆந்திர முதல்வரானார். இந்நிலையில், ஜெகன் மோகன் மீதான சொத்துக் குவிப்பு வழக் கில் விரைவில் நடவடிக்கை வேண்டும் என ஒய்எஸ்ஆர் கட்சியின் முன்னாள் எம்பி ரகு ராமகிருஷ்ண ராஜு உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திங்களன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா தலைமை யிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோக னுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை தாமதமாக மேற்கொள் வது ஏன்? என சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி, தாமதத்திற்கான கார ணத்தை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தர விட்டனர்.