india

‘நிதி ஆயோக்’ கூட்டத்தைப் புறக்கணிக்கும் இந்தியா கூட்டணி முதல்வர்கள்!

புதுதில்லி, ஜூலை 25 - 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், பாஜக மற்றும் அதன்  கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங் களுக்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங் களுக்கு உரிய நிதியை வழங்காமல் பாரபட்சம் காட்டியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை முன்வைத்து, நாடாளு மன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங் களின் ஒரு பகுதியாக, ஒன்றிய அர சின் பாரபட்சத்திற்கு தங்களின் எதிர்ப்பைக் காட்டும் வகையில், ஜூலை 27 அன்று பிரதமர் மோடி தலை மையில் கூட்டப்பட்டுள்ள ‘நிதி ஆயோக்’ கூட்டத்தைப் புறக்கணிக்க வும் எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக திட்டங் களுக்கு ஒரு பைசா நிதியைக் கூட ஒதுக்கவில்லை என்பதால் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தை புறக்கணிப்ப தாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின், பட்ஜெட் தாக்கலான அன்றே அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன், இமாச்ச லப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங்  சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் ‘நிதி  ஆயோக்’ கூட்டத்தைப் புறக்கணிப்ப தாக அறிவித்தனர்.

இந்நிலையில், ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் கலந்து கொள்ள மாட்டார் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணியின் ஒற்று மையை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. முன்னதாக கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் புறக் கணிப்பு முடிவை எடுத்துள்ளார்.