india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ்  இயங்கும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும்  12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாண வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப் பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் அதன் கடிகாரம் சின்னம் ஆகிய இரண்டையும் தேர்தல் ஆணையம் ஒதுக்  கிய நிலையில், கட்சியின் நிறுவனரான சரத் பவார்  தரப்புக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர  பவார் என்ற பெயரை பயன்படுத்த இந்திய தேர்தல்  ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா புதனன்று நிறைவேற்றப்பட்டது.

மதுபான கலால் கொள்கை வழக்கு தொடர்  பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்  கெஜ்ரிவால் பிப்.17-ஆம் தேதி நேரில் ஆஜராகு மாறு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள பசான் காடிம் கிராமத்தில் 20 நாய்கள் கடித்துக் குதறி யதில் 32 வயதான பெண் பலியானார்.

புதுச்சேரி மாநிலத்தில் கடற்கரை உள்ளிட்ட  பகுதிகளில் விற்கப்படும் ரோஸ் நிற பஞ்சு  மிட்டாய்களை சிறுவர், சிறுமிகளுக்கு வாங்கித்தர  வேண்டாம் என அம்மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. இதில் கார்சினோஜென் என்னும் ரசாயனமும், புற்றுநோய் ஏற்படுத்தும் நிறமியும் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என விளக்கமும் அளிக்  கப்பட்டுள்ளது.

நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரி மாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோர னுக்கு மேலும் 5 நாள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஞானவாபி மசூதியின் பாதாள அறை யில் இந்து பிரார்த்தனைகளை அனு மதிக்கும் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை அலகாபாத் உயர்நீதி மன்றம் வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மும்பை பாஜகவின் மிரட்டலுக்கு பணிந்தார் ராஜ் தாக்கரே

“இந்தியா” கூட்டணியின் எழுச்சி யால் மிரண்டுள்ள பாஜக பல்  வேறு கட்சிகளை தங்கள் கூட்ட ணிக்கு வருமாறு கெஞ்சி கூத்தாடி வரு கிறது. அவ்வாறு அழைக்கும் கட்சிகள்  வரவில்லை என்றால் மத்திய அமைப்பு கள் மூலம் சோதனை, சம்மன், கைது நட வடிக்கை மூலம் மிரட்டல் விடுக்கிறது பாஜக. பாஜகவின் இந்த மிரட்டலுக்குப் பயந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கடந்த மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. தற்போது சிவசேனா கட்சியின் நிறுவனரான பால் தாக்கரேவின் மருமகனும், நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவருமான ராஜ் தாக்கரே பாஜக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார்.

முந்தைய போராட்ட வழக்குகள், சில  முறைகேடு வழக்குகளை வைத்து மிரட்டி யதாலேயே ராஜ் தாக்கரே பாஜக கூட்ட ணியில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டேராடூன்
உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை 

சம்மன் மற்றும் கைது மூலம் நெருக்  கடி அளித்து “இந்தியா” கூட்டணித் தலைவர்களை வரவிடாமல், மக்க ளவைத் தேர்தல் பிரச்சாரம் செய்யும் முனைப்பில் அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை மோடி அரசு  ஏவி வருகிறது. 

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தது போல  தற்போது ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பா ளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அம லாக்கத்துறை தீவிரமாக களமிறங்கியுள் ளது. இதன் வரிசையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், உத்தரகண்ட் மாநில முன்  னாள் அமைச்சருமான ஹரக் சிங் ராவத்  (63) மீது பண மோசடி புகார் இருப்பதா கக் கூறி, அவரது வீடு (உத்தரகண்ட்) மற்  றும் தொடர்புடைய இடங்களில் (தில்லி,  சண்டிகர்) அமலாக்கத்துறை புதனன்று சோதனை நடத்தியது.

பழிவாங்கல் நடவடிக்கையா?
காங்கிரஸ் மூத்த தலைவரான டாக்டர்  ஹரக் சிங் ராவத் கடந்த 2016இல் மத்திய  அமைப்புகளின் நெருங்கடியால் பாஜக வில் இணைந்து எம்எல்ஏ ஆனார். கடந்த  2022 சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும்  சீட் வழங்கினாலும் பாஜகவின் கொள்கை  எனக்கு பிடிக்கவில்லை எனக் கூறி ஹரக்  சிங் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதற்கு பழிவாங்கும் நட வடிக்கையாக ஹரக் சிங் ராவத் மீது அம லாக்கத்துறை அவரது வீடுகளில் சோதனை நடத்தியுள்ளது.