புதுதில்லி, ஜூலை 25 - கனிம வளங்களுக்கு வரி விதிக்க நாடாளுமன்றத்திற்கு அதி காரம் இல்லை என்றும், வரி விதிப்பு அதிகாரம் மாநில அரசு களுக்கு மட்டுமே இருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
கனிம வளங்களுக்காக மாநில அரசுகள் பெறும் ராயல்டியை வரியாக கருத முடியாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னதாக, கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநில அரசு களுக்கு உரிமை கிடையாது என ஒன்றிய அரசும், இந்தியா சிமெண் ட்ஸ், ஒடிசா சிமெண்ட்ஸ், மகாநதி கோல்ஸ் உள்ளிட்ட கனிமவள நிறு வனங்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. 8 நாட்களில் 86 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், அபய் எஸ். ஓகா, பி.வி. நாகரத்னா, ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சர்மா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய 9 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ‘சுரங்கங்கள் மற்றும் குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிப்பதை, நாடாளுமன்றத்தின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) 1957 சட்டம் வரையறுக்கவில்லை. அரசியலமைப்பின் 246-ஆவது பிரிவின் கீழ் மாநில சட்டமன்றங் களே சுரங்கங்கள் மற்றும் குவாரி களுக்கு வரி விதிக்கும் அதி காரத்தைப் பெறுகின்றன. கனிம வளம் கொண்ட நிலங்கள் என்ப வை ‘நிலங்கள்’ என்ற விளக்கத் துக்குள் அடங்கும்.
எனவே, அரசியலமைப்பின் பட்டியல் 2, பிரிவு 50-இன் கீழ் கனிம வளங்களுக்கு விதிக்க நாடாளு மன்றத்திற்கு அதிகாரம் இல்லை. 1989ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, ராயல்டி என்பது வரி என்று கூறி யது தவறானது.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் மூலம், மாநில அரசுகள் தங்கள் வரம்புக்குள் வரக்கூடிய சுரங்கங்கள் மற்றும் குவாரிகளுக்கு வரி விதிப்பதை கட்டுப்படுத்த முடி யாது. சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், அரசுக்கு செலுத்தும் ராயல்டி என்பது வரி அல்ல. அது குத்தகை பணம்தான்’ என தெரி வித்தார்.
அதேநேரம் நீதிபதி பி.வி. நாகரத்னா வழங்கிய தீர்ப்பில், “சுரங்கங்கள் மற்றும் கனிமங் களைக் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை” என தெரிவித்தார்.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்து வந்த எஸ்.எச். கபாடியா தலைமையிலான உச்ச நீதி மன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, கடந்த 2011-ஆம் ஆண்டு நேரடியாக 9 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்றி பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் மூலம் ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் பயன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.