india

img

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களாக சிறையில் இருந்து வரும் தில்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
தில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 
இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் மனுவை நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும், உத்தரவாதத் தொகையாக ரூ.10 லட்சம் செலுத்தவும் உத்தரவிட்டது.