புதுதில்லி, பிப். 8 - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, நாட்டின் தலை நகரான புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில், கேரளம் நடத்திய போராட்டம் புதிய வரலாறு படைத்தது.
கேரள ஹவுஸில் இருந்து பேரணியாக புறப்பட்ட முதல்வர் பினராயி விஜயன், மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஜந்தர் மந்தரில் கூடி ‘கூட்டாட்சியை பாது காப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இதில் இந்தியா கூட்டணியிலுள்ள மாநில முதல்வர்கள் - அமைச்சர்கள், அரசியல் கட்சி களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிரான நட வடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நரேந்திர மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
வரி வருவாய் ஆதாரத்தை அபகரித்த மோடி அரசு
வருமான வரி, கார்ப்பரேட் வரி, ஜிஎஸ்டி, டீசல், பெட்ரோலுக்கு கலால் வரி, செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் (surcharge) போன்ற வரி களை மாநிலங்களிடம் இருந்து ஒன்றிய அரசு வசூலித்துக் கொள்கிறது.
ஆனால், மாநிலங்களுக்கு வரிப் பங்கீடாக வழங்க வேண்டிய தொகையை முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு குறைத்துவிட் டது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் கேர ளம், தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநி லங்களை பல வகைகளிலும் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.
எனவே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்கள் மீதான பாரபட்சம் மற்றும் அரசிய லமைப்பு உறுதிசெய்த கூட்டுறவுக் கூட்டாட்சி யை மீறி, மாநிலங்களை வரி வருவாய் ரீதி யாக பலவீனப்படுத்தும் சூழ்ச்சியை கண்டித்து, கேரளத்தின் நிதி தன்னாட்சி மற்றும் மாநில சுயாட்சியை பாதுகாக்கவும் நாடாளுமன்றம் அருகே ஜந்தர் மந்தரில் போராட்டம் நடை பெறும் என கேரள முதல்வர் பினராயி விஜயன், கடந்த மாதம் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமை யாவும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அடுத்தடுத்துப் போராட்டங்களை அறிவித்தனர்.
கேரளம் நடத்தும் போராட்டத்தில், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகள், பாஜக கூட்டணியில் அல்லாத மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலை வர்களும் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார். அதனடிப்படையில், கேரளம் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவளித்து- தமிழ்நாடும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறி வித்தார். இந்தியா கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் தங்களின் ஆதரவை அறிவித்தனர்.
வரலாறு படைத்த தில்லி போராட்டம்
அதன்படி ‘கூட்டாட்சியை பாதுகாப்போம்’ என்கிற முழக்கத்தை முன்வைத்து தில்லி ஜந்தர் மந்தரில் வியாழனன்று நடைபெற்ற பேரணி மற்றும் தர்ணாவை கேரள முதல்வர் பின ராயி விஜயன் துவக்கி வைத்தார்.
தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி நிறு வனருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (காணொலி) சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, சிபிஐ தேசியச் செயலாளர் து. ராஜா, கேரள மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன் (திமுக), நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, கேரள காங்கிரஸ் (எம்) தலை வர் ஜோஸ் கே மாணி, விடுதலைச் சிறு த்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., சிபிஎம் மாநிலங்களவைத் தலைவர் எளமரம் கரீம், மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜான் பிரிட்டாஸ், கபில் சிபல் ஆகியோர் பேசினர்.
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், எம்.ஏ. பேபி, பிருந்தா காரத், கேரள மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன், எல்டிஎப் அமைப்பாளர் இ.பி. ஜெயராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ஜந்தர் மந்தரில் முதல்வர் பின ராயி விஜயன், அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள், கேரள சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். மதியம் வரை போராட்டம் நடைபெற்றது.
மல்லிகார்ஜூன கார்கே ஆதரவு
கேரளத்தின் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆதரவு தெரிவித்திருந்தார். கேரளம் மீது ஒன்றிய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்றும், போராட்டம் நியாயமானது என்றும் கார்கே கூறியிருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் முதல்வர்கள் மற்றும் அகில இந்தியத் தலைவர்கள் போராட்டத் திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் தில்லி மலையாளிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
தில்லி போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து எல்டிஎப் தலைமையில் வியாழன ன்று (பிப்.8) கேரளா முழுவதும் கண்டனப் பேர ணிகளும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன.
கேரளம் நடத்திய இந்தப் போராட்டம், கூட்டுறவு - கூட்டாட்சித் தத்துவத்தைப் பாது காக்கும் போராட்டமாக வரலாற்றில் இடம்பெற்றது.