புதுதில்லி, ஆக.17- பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நாடு தழுவிய விவாதத்தை ஏற்படுத்தி யுள்ளது. மதச்சார்பற்ற சிவில் சட்டம், ஒரே தேசம் ஒரே தேர்தல், சிறுபான்மை யினர் - பெண்கள் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு என்று உரைக்கு எடுத்துக் கொண்ட அத்தனை விஷயங்களிலும் பிர தமர் மோடி அப்பட்டமாக பொய்களை அடுக்கியுள்ளார்; முழு உரையும் பொய்யுரையாகவே அமைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் அம்ப லப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், மோடியின் பொய்யுரைக்கு தகுந்த பதிலடி கொடுத்து காணொளி வெளியிட்டுள்ளார். அதில், “வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையே நீண்ட இடைவெளி கொண்ட மோடியின் உரை மக்களால் நிராகரிக் கப்பட வேண்டியது” என்று குறிப்பிட்டுள் ளார்.
சீத்தாராம் யெச்சூரி மேலும் கூறியி ருப்பதாவது:
பிரதமர் தனது சுதந்திர தின உரை யில் 5 அடிப்படை பிரச்சனைகளை எழுப்பியுள்ளார். இவைதான் இனி வரும் ஆண்டில் தனது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என கூறி யுள்ளார்.
பொது சிவில் சட்டம்
ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மூன்று முக் கிய பிரச்சனைகளில்- பூர்த்தியாகாத ஒன் றும் இந்த 5 நிகழ்ச்சி நிரல்களில் உள் ளது.
அதாவது காஷ்மீரின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டு விட்டது. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப் பட்டு விட்டது. பூர்த்தியாகாத மூன்றா வது பிரச்சனை, பொது சிவில் சட்டம் அறி முகம் என்பதாகும்.
ஆனால் இதற்கு பிரதமர் தற்போது ‘மதச்சார்பற்ற சிவில் சட்டம்’ என நாம கரணம் சூட்டியுள்ளார். பிரதமரின் கூற்றுப்படி- இதன் பொருள் என்ன வென்றால், இது வரை நாம் மதவாத அடிப்படையிலான சிவில் சட்டத்தை அமலாக்கி கொண்டு வந்துள்ளோம் என்பதாகும். இப்படி கூறுவது கொடூர மானது; வன்மையாக கண்டிக்கத்தக் கது.
கடந்த 78 ஆண்டுகளில் நாம் அம லாக்கிய சிவில் சட்டம் தலித்- ஆதிவாசி- மற்றும் ஏனைய விளிம்பு மக்களுக்கு பல உரிமைகளை தந்துள்ளது. அத்தகைய சிவில் சட்டத்தை ‘மதவாத அடிப்படை யிலான சிவில் சட்டம்’ என எப்படி வரை யறுக்க முடியும்?
இப்படி மதப்பிளவுவாத துருப்புச் சீட்டை பயன்படுத்துவது பிரதமருக்கு ஒரு உள்ளார்ந்த தவிர்க்க முடியாத மோசமான குணமாகவே உருவாகி விட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் அவர் ஆற்றிய 171 உரைகளில் 110 உரைகள் முஸ்லிம்கள் மீதான தாக்கு தல்களை வெளிப்படுத்தின. எனவே மதச்சார்பின்மை- மதவாத கருத்துகள் என்பது அவருக்கு ஒரு உள்ளார்ந்த சிந்தனையாகவே உருவெடுத்துள்ளது என தோன்றுகிறது. மதச்சார்பின்மை - மதவாதம் எனும் இந்த பிரிவினையை நிரந்தரமாக நிலைநாட்டுவதற்கு அவர் கள் முனைகின்றனர்.
எப்படியிருந்தாலும் பொது சிவில் சட்டம் என்பதற்கு மிகப்பரவலான கலந்தாலோசனைகள் தேவைப்படு கின்றன. மோடி அரசாங்கத்தால் நிய மிக்கப்பட்ட சட்ட ஆணையம் கூட இன்று இந்தியாவில் பொது சிவில் சட்டத்துக்கு தேவை எழவில்லை எனவும் அதனை அமலாக்க வேண்டியது இல்லை என கருத்து தெரிவித்துள்ளது. பரவலான கலந்தாலோசனைகள் இல்லாமல் பொது சிவில் சட்டம் திணிக்கப்பட்டால் தேசம் முழுவதும் குழப்பங்களும் அதிருப்தி களும்தான் விளையும். எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரே தேசம் - ஒரே தேர்தல்
பிரதமர் எழுப்பிய இரண்டாவது பிரச் சனை அவருக்கு மிகவும் பிடித்தமான “ஒரே தேசம் - ஒரே தேர்தல்” என்பதா கும். இது குறித்து மோடி அரசாங்கம் நிய மித்த குடியரசு முன்னாள் தலைவர் ராம் கோவிந்த் தலைமையிலான ஆணை யம் ஒரே தேர்தல் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 4 திருத்தங்கள் அரசிய லமைப்புச் சட்டத்தில் செய்யப்பட வேண் டும் என கூறியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. சில திருத்தங்கள் மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலையும் பெற வேண்டும். இத்த கைய பெரும்பான்மை இன்று பாஜக வுக்கு இல்லை. பின்னர் ஏன் பிரதமர் பேச வேண்டும்? ஏனெனில் இது ஒரு பிரச்சா ரம். இந்த பிரச்சாரத்தை தொடர வேண் டும். தேர்தலில் பிரதமர் ஈடுபட்ட பிரச்சா ரத்தின் மிச்ச சொச்சமாக இது இன்னும் தொடர்கிறது.
பெண்கள் பாதுகாப்பு
அவர் எழுப்பிய மூன்றாவது பிரச் சனை பெண்கள் பாதுகாப்பு பற்றியது! பெண்கள் பாதுகாப்பு பற்றி அவர் பேசு வது மிகவும் கொடூரமானது. மணிப்பூர் இனக்கலவரங்கள் நடந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. அங்கு பெண்கள் எப் படி மானபங்கப்படுத்தப்பட்டனர் என்பதை தேசம் முழுவதும் மட்டுமல்ல; உலகமே பார்த்து அதிர்ச்சி அடைந்தது. ஆனால் அந்த மணிப்பூருக்கு பிரதமர் இன்றுவரை ஒருமுறை கூட சென்று ஆறுதல் கூறவில்லை.
அது மட்டுமல்ல; அவர் தலைமைத் தாங்கும் கட்சியினர், பெண்களைப் பாலி யல் பலாத்காரம் செய்தவர்களை ஆத ரித்து வரவேற்கின்றனர். இதனை குஜ ராத்தில் பில்கிஸ் பானு பிரச்சனையில் தேசம் பார்த்தது. பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் பாஜக ஊழியர்களால் மாலையிடப்பட்டனர்; பாராட்டப்பட்ட னர். இவரது கட்சியின் அரசாங்கங் கள்தான்- பெண்களையும் சிறுமிகளை யும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி நீதி மன்றங்கள் மூலம் தண் டனை பெற்ற- ராம் ரஹீமிற்கும், ஆசா ராமிற்கும் பரோல் எனும் தற்காலிக விடு தலையைத் தொடந்து தருகின்றன. இப் பொழுது பிரதமர் பெண்கள் பாது காப்பு பற்றி பேசுவது எவ்வளவு பொய் மையானது என்பதும் அவை வெற்று வார்த்தைகள் என்பதும் அனைவரும் காணும் வகையில் அம்பலமாகியுள்ளது.
நகைப்புக்குரிய ஊழல் ஒழிப்பு வாக்குறுதி
நான்காவதாக ஊழலை அகற்றுவது பற்றி பேசுகிறார். இவரது ஆட்சியில் நடந்த ஊழல் பற்றி ஹிண்டன்பர்க் அறிக் கைகள் அதிர்ச்சித் தகவல்களை வெளி யிட்டன. இந்த ஆட்சியில் நடந்த ஒவ் வொரு ஊழலையும் எப்படி மூடி மறைக்க முயற்சிகள் நடந்தன என்பதை அனை வரும் அறிவர். இதற்கு முன்பு ரபேல் ஊழல் எப்படி மறைக்கப்பட்டது என்பது பார்த்தோம். இன்னொரு பெரிய ஊழல் தேர்தல் பத்திரங்கள். பாஜக அரசாங் கம் நடத்திய ரெய்டுகளுக்கு பின்னர் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது குற் றங்களை மறைக்கவும் தம்மைப் பாது காத்துக் கொள்ளவும் பாஜகவுக்கு ஏரா ளமாக நன்கொடைகள் கொடுத்தன. ரெய்டுகளுக்கும் நன்கொடைகளுக்கும் உள்ள தொடர்புகள் மேலும் மேலும் அம்பலப்பட்டு வருகின்றன. இதற்கு பின்னரும் ‘ஊழலைத் தடுப்பேன்’ என பிரதமர் வீரம் பேசுகிறார். பிரதமரின் இந்த பேச்சு முற்றிலும் நகைப்புக்குரி யது.
முஸ்லிம் சிறுபான்மையினரும் இந்துச் சிறுபான்மையினரும்
ஐந்தாவதாக அவர் வங்கதேச பிரச் சனை பற்றி பேசினார். அங்கு சிறுபான்மை மக்களான இந்துக்களின் பாதுகாப்பு பற்றி கருத்து தெரிவித்தார். அது மிகச்சரியானதுதான்! அங்கு இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்துக்கள் பாதுகாப்புப் பற்றி புதிய ஜனாதிபதி யூனு சுக்கு இந்திய அரசாங்கம் மட்டுமல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் வற்புறுத்தியுள்ளன.
ஆனால், இந்த பிரச்சனையில் இரட்டை பேச்சும், இரட்டை அணுகுமுறையும், பிரதமரின் கூற்றில் எந்த அளவுக்கு அழுத்தமும் நம்பகத்தன்மையும் இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு நம்பகத்தன்மையை உருவாக்காது. இங்கு நமது தேசத்தில் முஸ்லிம்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் நச்சுப்பிரச்சாரமும் வெறுப்புப் பிரச்சாரமும் வன் முறையும் பங்களாதேஷில் சிறுபான்மை இந்து மக்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் பேசுவதும் எதிர்மறையாக இருக் கும். அங்குள்ள சிறுபன்மை இந்து மக்களின் பாதுகாப்பு பற்றிய நமது விருப்பமும் இந்தியாவில் உள்ள முஸ்லிம் - கிறித்துவ சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு குறித்த நமது செயல்க ளும் ஒத்திசைந்து இருக்க வேண்டும். இந்தியாவில் மதவழிச் சிறுபான்மை மக்கள் உட்பட அனைத்து பிரிவினரும் சமத்து வமாக நடத்தப்படுகின்றனர் எனும் நடைமுறையை உரு வாக்க வேண்டும். இந்தியாவில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு பற்றி மோடி அரசின் கடந்தகால நடவடிக்கை கள் மிகவும் தவறானவை. கண்டிக்கப்பட வேண்டியவை. பிரதமரின் இரட்டைப் பேச்சும் நடவடிக்கைகளும் நம்ப கத்தன்மையை உருவாக்காது.
கிட்டத்தட்ட தனது 100 நிமிட உரையில் பிரதமர் எழுப்பிய இந்த 5 முக்கிய பிரச்சனைகள் குறித்து அவர் பேசிய உரை கள் மற்றும் அளித்த வாக்குறுதிகள் பொய்யானவை. அவை பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படும் வாய்ச்சவடால்தானே தவிர ஒரு அரசாங்கத்தின் முக்கிய பணிகளாக எடுத்துக்கொள்ள முடி யாது என்பதை அறிய இயலும். இந்த பொய்மைகளையும் வாய்ப் பந்தலையும் பொருத்தமாக அம்பலப்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்ல; அவற்றை இந்திய மக்கள் நிராகரிக்க வேண்டும்.
தமிழில் தொகுப்பு : அ.அன்வர் உசேன்