india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அமலுக்கு வரும் புதிய குற்றவியல் சட்டங்கள்
அரசமைப்பை கேலிக்
கூத்தாக்குகின்றன: டீஸ்டா

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்  பாரதிய நியாய சம்ஹிதா, பார தீய சிவில் பாதுகாப்பு மற்றும்  பாரதிய சாக்ஷ்யா சட்டம் ஆகியவை இந்திய அரசியல மைப்பை கேலிக் கூத்தாக்குவதாக மனித உரிமை ஆர் வலர் டீஸ்டா  செதல்வாத் கூறினார்.

இந்தச் சட்டங்கள் அரசமைப்பின் இறையாண்மையை கேலி செய்கின்றன.  இந்த சட்டங்கள் விரிவான ஆலோசனை யின்றி நிறைவேற்றப்பட்டன. சட்டப் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைப் போராட்டங்கள் மூலம் திருத்தப்பட்ட சட்  டங்கள் மறுகாலனியாக்கம் என்ற பெய ரில் சீர்திருத்தப்படுகின்றன. இது ஜன நாயக செயல்பாட்டில் பங்கேற்பதை  கடினமாக்கும் என்றும் இந்து ராஷ்டிரா வுக்கு வழிவகுக்கும் சட்டங்கள் இவை என்றும் டீஸ்டா கூறினார்.

புதுதில்லி
நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது

18ஆவது மக்களவையின் முதல்  கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஜனாதி பதி உரைக்கு பிறகு மாநிலங்களவையும் துவங்கியது. வெள்ளியன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நீட் ஊழல்  குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தியும், எதிர்க்கட்சிகள் பேசும் பொழுது “மைக் அணைப்பு” விவகாரத்திற்கு விளக்கம் அளிக்கக் கோரியும் இந்தியா கூட்டணி  எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இத னால் நாள்முழுவதும் அவை ஒத்தி வைக்கப்படுவதாகவும் மீண்டும் திங்க ளன்று (ஜுலை 1) அவை கூடும் என மக்க ளவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநி லங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்த நிலையில், அதன்படி திங்க ளன்று மீண்டும் நாடாளுமன்ற அவை கள் கூடுகிறது. திங்களன்று மதியம் மக்க ளவை துணை சபாநாயகர் தேர்வு தொடர்  பான விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.