india

img

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொது இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை தாமதிக்காமல் வழங்கிடுக!

புதுதில்லி, ஜூலை 23- தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி. பொது இன்சூ ரன்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை தாமதிக்காமல் வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வரு மாறு:

நாடாளுமன்றத்தில் அரசு பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வு 01.08.2022 இல்  நிலுவையாகி இரண்டு ஆண்டுகள்  முடிவடையும் நிலையிலும் அங்கு  ஊதியம் மாற்றம் செய்யப்படவில் லையே! மேலும் 2023 - 24 இல் முந்தைய ஆண்டின் நிலைமையை மாற்றி லாபகரமான சேவையை உறுதி செய்துள்ள பொது இன்சூ ரன்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தாமதமாவது ஏன் என்ற கேள்வியை (எண் 79/22.07.2024) எழுப்பியிருந்தேன். 

அதற்கு நிதி இணை அமைச்சர்  பங்கஜ் சவுத்திரி அளித்த பதிலில்,  பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முந்தைய ஆண்டில் ரூ.3529 கோடி கள் நட்டம் என்று இருந்த நிலைமை மாற்றப்பட்டு 2023- 24 இல் ரூ.7588 கோடி லாபம் ஈட்டும் நிலைக்கு  முன்னேறி உள்ளன என்பதை தனது  பதிலிலும் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கான பேச்சு வார்த்தைகள் அரசு பொது இன்சூ ரன்ஸ் நிறுவனங்களின் சங்கம்  (GIPSA) மற்றும் தொழிற்சங்கங் களுக்கு இடையே தகவல் பரி மாற்றம்/பேச்சுவார்த்தை வாயி லாக நடைபெற்று தீர்வு காணப்  படுவது நடைமுறை என தெரிவித்  துள்ளார். அரசுக்கு இதுவரை அரசு  பொது இன்சூரன்ஸ் நிறுவனங்க ளின் சங்கத்திடமிருந்து (GIPSA) முன்மொழிவு ஏதும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

லாபகரமாக அரசு பொது இன்சூ ரன்ஸ் நிறுவனங்கள் இயங்குகிற நிலையில், இதில் நிதி நிறுவனங் களில் ஊதிய உயர்வும் வழங்கப் பட்டு விட்ட சூழலில், அரசு பொது இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு தாமத மாவது நியாயமல்ல, உடனடியாக அதற்கான பேச்சுவார்த்தைகளை அங்குள்ள தொழிற்சங்கங்களுடன் துவக்கி தீர்வு காண அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சங் கத்திற்கு அமைச்சகம் அறிவுரை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.