india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயா ராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்து வரும்  சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில், திங்க ளன்று இரவு ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்த ஜார்க்கண்டின் ஷுப் சவுத்ரி என்ற மாணவர் கோட்  டாவில் உள்ள விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டில் இது 4-ஆவது தற்கொலையாகும்.

ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் சங்க பண மோசடி  வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய 2-ஆவது சம்மனை “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டு கட்சித் தலை வர் பரூக் அப்துல்லா புறக்கணித்தார்.

கேரளாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாய மானதாக தேடப்பட்டு வந்த பிரபல திரைப்  பட இயக்குநர் பிரகாஷ் கோலேரி (65) அவரது வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டார்.

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் முகேஷ்  அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சந்தை மூலதனத்தில் ரூ.20 லட்சம் கோடியைத் தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெயரை பெற்றது. மத்தியப்பிரதேச பாஜக அரசை கண்டித்து அம்  மாநில இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தை தடியடி மற்றும் தண்ணீரை பீய்ச்சி  கலைத்தனர்.

“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும்  ஆம் ஆத்மி கட்சி, தில்லியில் 6 மக்கள வைத் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய் துள்ளதாக தெரிவித்துள்ளது. தில்லியில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு  ஒரு தொகுதி அளிக்க உள்ளதாக ஆம் ஆத்மி விருப்பம் தெரிவித்துள்ளது.  

நாட்டில் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான அழைப்புகள் அதிகமாக வரும் நிலையில், செவ்வாயன்று மும்பை விமான  நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டதையொட்டி அங்கு கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 அன்று துவங்கி ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வு தேதி தொடர்பான உறுதியான அறிவிப்பு வெளியிட்ட பொழுதிலும், சமூகவலைத்தளங்களில் வெளியாகும் போலி யான வதந்திகளை நம்பவேண்டாம் என சிபிஎஸ்இ  அறிவித்துள்ளது.

புதுதில்லி
மோடி அரசின் உத்தரவை நிராகரித்த தில்லி அரசு 

குறைந்தபட்ச ஆதரவு விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந் துரைகளை அமல்படுத்துதல், 2020இல் விவசாயிகளின் போராட்ட வன்  முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் தேசிய தலைநகரில் போராட்டம் நடத்த தில்லியை நோக்கி பேரணியாக விரைந்  துள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா, நித்யா னந்த ராய் ஆகியோர் 2 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், தில்லிக்குள் விவசாயி கள் நுழைவதைத் தடுக்க எல்லைகளில்  சிமெண்ட் கட்டமைப்புடன் அமைக்கப்  பட்ட தடுப்புகளுடன் பலத்த பாதுகாப்பு ஏற்  பாடுகளை செய்துள்ளது மோடி அரசு. 

தடைகளை மீறி தில்லிக்குள் விவசாயி கள் நுழைந்தால் அவர்களை சிறையில்  அடைக்க பவனா மைதானத்தை சிறைச் சாலையாக மாற்றும் ஏற்பாடுகளை செய்  யுமாறு தில்லி மாநில அரசுக்கு ஒன்றிய  அரசு உத்தரவிட்டது. 

ஒவ்வொரு குடிமகனும் அமைதியான  வழியில் போராட்டம் நடத்த அரசியல்  அமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள் ளது. எனவே விவசாயிகளை கைது செய்  வது தவறானது எனக் கூறி ஒன்றிய அர சின் உத்தரவை தில்லியை ஆளும் ஆம்  ஆத்மி அரசு நிராகரித்துள்ளது.