india

அயோத்தி ராமர் கோவிலை மோடி திறப்பது தர்ம நீதியாம்

அயோத்தி, ஜன. 13 - அயோத்தி ராமர் கோயில் திறப்பு முறையாக நடைபெறவில்லை; கோவில் முழுமையாக கட்டி முடிக்கப் படாத நிலையில், அரைகுறையாக நிற்கும் கோயிலைத் திறப்பது சாஸ்திர விதி மீறல் என்று சங்கராச் சாரியார்கள் உள்ளிட்ட இந்து மதத் தலைவர்கள் பலர் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

ஆனால், அயோத்தி ராமர் கோவில்  குடமுழுக்குப் பணிகள் அனைத்தும் சாஸ்திரப்படியே நடத்தப்படுவதாக கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் தெரி வித்துள்ளார். “ராஜநீதி தர்மநீதி என இரண்டு இருக்கிறது.

ராமர் கோவிலை  அவர்கள் (பாஜக) கட்டி இருக் கிறார்கள். அதற்கான ஆசீர்வாதத்தை இன்று அவர்கள் பெறுகிறார்கள். இது  ராஜநீதி கிடையாது; ஆனால் தர்மநீதி”  என குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ், “சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால், அம்மாநில முதல்வர் மம்தா  பானர்ஜிக்கு காவி வண்ணத்தைக் கண்டாலே கோபம் வருகிறது. மம்தா பானர்ஜிக்கு சிலர் மும்தாஜ் கான் என பெயர் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த  அளவுக்கு அவரது செயல்பாடு இருக் கிறது”  என்று காட்டமாக கூறியுள் ளார்.