மகாராஷ்டிர மாநிலத்தில் நவம்பர் 20-ஆம் தேதியன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் நவம்பர் 26ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில், 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி, நவம்பர் 20-ஆம் தேதியன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 29-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். நவம்பர் 4-ஆம் தேதி வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள். நவம்பர் 20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.