புதுதில்லி, ஆக. 26 - “இஸ்ரேலின் இனப்படு கொலைக்கு இந்தியா உடந்தை யாக இருக்க முடியாது; எனவே, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், வெடி மருந்துகள் வழங்குவதை இந்தியா உடனடியாக நிறுத்தியாக வேண்டும்” என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதில், இந்தக் கோரிக்கையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி யின் அங்கமாகவும், முக்கிய கூட்டாளியாகவும் இருக்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளமும் இணைந்துள்ளது.
அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன், பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் கொன்றழித்து வரும் நிலையில், பாதிப்பிற்கு உள்ளாகி யிருக்கும் அந்த மக்களுக்கு தங்க ளின் ஒருமைப்பாட்டைத் தெரி விக்கும் வகையிலான கூட்டம், பாலஸ்தீன ஆதரவு அமைப்பான அல்-குத்ஸிற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் லீக்கின் பொதுச் செயலாளர் முகமது மக்ரம் பாலாவி தலைமையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இதனை சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜாவேத் அலி கானும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் கே.சி தியாகி ஆகியோர் ஒருங்கிணைத் திருந்தனர். சமாஜ்வாதி எம்.பி. மொ ஹிபுல்லா நத்வி, முன்னாள் எம்.பி. யும் ராஷ்டிரவாதி சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவருமான முகமது அதீப், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், ஆம் ஆத்மி எம்எல்ஏ பங்கஜ் புஷ்கர், காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் மீம் அப்சல், முன்னாள் மக்க ளவை எம்.பி. குன்வார் டேனிஷ் அலி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில், தலைவர் கள் அனைவரும் கையொப்ப மிட்டு கூட்டறிக்கை ஒன்றை வெளி யிட்டனர். அந்த அறிக்கையில் தான் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில், இஸ்ரேலின் சியோனிச ஆக்கிர மிப்பை ஏற்க முடியாது; பாலஸ் தீனிய மக்களின் மீது இஸ்ரேல் கொடூரமான இனப்படு கொலையை நடத்தி வருகிறது; இந்நிலையில், பாலஸ்தீன மக்க ளுக்கு அமைதியான வாழ்க்கை, நீதியை உறுதிப்படுத்த இந்திய அரசு முன்வர வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளனர்.
“கீழே கையொப்பமிட்டவர் களான நாங்கள்... இஸ்ரேலினால் நடந்து வரும் சியோனிச ஆக்கிர மிப்பு மற்றும் பாலஸ்தீன மக்கள் மீதான கொடூரமான இனப் படுகொலையை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். இந்த கொடூரமான தாக்குதல் மனித குலத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, சர்வதேச சட்டம் மற்றும் நீதி மற்றும் அமைதி கோட்பாடுகளை கடுமையாக மீறுவதாகும்.
நீதி மற்றும் மனித உரிமைகளுக் காக எப்போதும் போராடும் தேச மாக இருக்கும் இந்தியா, இந்த இனப்படுகொலைக்கு உடந்தை யாக இருக்க முடியாது; 1988-இல் பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடாக இந்தியா பெருமை கொள்கிறது. மேலும் பாலஸ்தீனிய மக்களின் ‘சுய நிர்ணயம், இறையாண்மை மற்றும் விடுதலைக்கான’ உரிமை யை தொடர்ந்து இந்தியா ஆதரித்துள்ளது. அந்த வகையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வழங்குவதை நிறுத்துமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.
மேலும், நாங்கள் பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறோம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் (United Nations Security Council - UNSC) தீர்மானங்களை நிறைவேற்றவும், இந்த ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வரவும், பாலஸ்தீனத் தில் நடந்து வரும் இனப்படுகொலை யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைதி மற்றும் நீதியை உறுதிப் படுத்தவும், இந்திய அரசு மற்றும் சர்வதேச சமூகம் விரைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.” என்று கூட்டறிக்கை யில் வலியுறுத்தியுள்ளனர்.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி யானது, ஏற்கெனவே மோடி அரசு கொண்டு வந்த வக்பு சட்டத் திருத்தத்திற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. தற்போது, இஸ்ரேலுக்கு மறைமுக ஆதர வளிக்கும் மோடி அரசின் மறை முகமான நிலைபாட்டையும் பகிரங்கமாக எதிர்த்துள்ளது.
இஸ்ரேலுக்கு இந்தியா நேரடி யாக ஆயுதங்கள் வழங்கக் கூடாது என்பது மட்டுமன்றி, இஸ்ரே லுக்கான யுத்த தளவாடங்கள் இந்திய துறைமுகங்கள் வழியாக செல்லவும் எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் ஏற்கெனவே போராட்டங்களை நடத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.