ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் இந்திய ஆப்பிள் விவசாயிகள் கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆப்பிள் விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், ஆப்பிள் தொழிலை கார்ப்பரேட்மயமாக்குவதை தடுத்து நிறுத்தி உற்பத்தி செலவை குறைத்து விவசாயிகளை காக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து ஒன்றிய மற்றும் இமாச்சலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் (ஆளுநருக்கு) மற்றும் உத்தரகண்ட் மாநில அமைச்சர்களுக்கு குறிப்பாணை சமர்ப்பிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் விவசாயிகள் கூட்டத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.