ஜம்மு-காஷ்மீர் பகுதியின் “இந்தியா” கூட்டணியில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி (பரூக் அப்துல்லா), மக்கள் ஜனநாயக கட்சி (மெகபூபா முப்தி) ஆகிய கட்சிகள் உள்ளன. தொகுதி பிரிப்பு மற்றும் பாஜகவை புறந்தள்ளும் வியூ கத்தில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி (பரூக் அப்துல்லா) ஆகிய கட்சிகள் கூட் டணி அமைத்தும், மக்கள் ஜனநாயக கட்சி தனித்தும் போட்டியிடுகிறது. அதாவது கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் மாநிலங்க ளில், மாநில அரசியல் நிலைமைக்கு ஏற்ப தனித்து களமிறங்குவது போன்று ஜம்மு-காஷ்மீரிலும் “இந்தியா” கூட்டணிக் கட்சி கள் இரண்டு பிரிவுகளாக மக்களவைத் தேர் தலை எதிர்கொள்ள உள்ளன. ஜம்மு, லடாக், உதாம்பூர் மக்களவை தொகுதி களில் காங்கிரஸ் கட்சியும், ஸ்ரீநகர், ஆனந்த்நாக் - ரஜோரி, பாராமுல்லா ஆகிய தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி யும் போட்டியிடுகின்றன. தனித்து போட்டி யிடும் மெகபூபா முப்தியின் மக்கள் ஜன நாயக கட்சி 3 தொகுதிகளில் (ஆனந்த் நாக் - ரஜோரி, பாராமுல்லா, ஸ்ரீநகர்) களமி றங்குகிறது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் தனித்து போட்டியிட்டாலும், ஜம்முவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதர வாக பணியாற்றுவோம் என மெகபூபா முப்தி அறிவித்துள்ளார். தங்களுக்கு இரண் டாம் இடம் கூட கிடைக்காது என்பதை உணர்ந்துள்ள பாஜக “கோடி மீடியா” ஊடகங்கள் மூலம் ஜம்மு-காஷ்மீ ரில் “இந்தியா” கூட்டணி உடைந்ததாக தலைப்பு செய்தியாக வெளியிட்டு சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.