india

img

உச்சநீதிமன்றத்தில் தீ விபத்து

இந்திய நாட்டின் உச்சநீதிமன்றம் தில்லி திலக் மார்க் பகுதியில் உள்ளது.  அங்கு நீதிமன்றத்தின் காத்திருப்பு மையத் தில் திங்கள்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் உச்சநீதிமன்றத்தின் 11 மற்றும் 12ஆம் எண் கட்டிடத்திற்கு அருகில் உள்ள காத்தி ருப்புப் பகுதி கட்டிடங்களின் பெரும்பா லான பகுதிகள் தீ விபத்தில் சிக்கின. இதனால் 11 மற்றும் 12ஆம் எண் கட்டி டத்தில் நடைபெறவிருந்த வழக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மின்னழுத்தம் காரணமாகவே இந்த தீ விபத்து நிகழ்ந் தது என்றும், தீ விரைந்து அணைக்கப் பட்டதால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்றும் உச்சநீதிமன்ற பாது காப்புப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.