புதுதில்லி இந்தியாவில் காற்று மாசு பாட்டால் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் உயிரிழப்ப தாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் காலநிலை, சுகாதாரம் மற்றும் காற்று மாசுபாடு ஆராய்ச்சிக்கான கூட்ட மைப்பு (CHAIR-India) ‘லான்செட் பிளானட்டரி ஹெல்த்’ இதழில் வெளி யிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது. இந்த ஆய்வு இந்தியா, ஸ்வீடன், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களின் ஒத் துழைப்புடன் நடத்தப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு கன மீட்டர் காற்றிலும் 1.5 PM வரை மட்டுமே நுண்துகள் தூசி இருக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், 2008 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா வின் பல நகரங்களில் 2.5 PM (நுண்துகள்கள்) அளவு காற்றில் அதிகமாகக் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால் நுரையீரல், இரத்த ஓட்டத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது இந்தியாவின் பொது சுகாதாரத்தை கேள்விக்குறி யாக்கி யுள்ளதுடன், மக்க ளின் உடல்நலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவும் மாறி யுள்ளது.
ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்:
M 2009 முதல் 2019 வரை 655 மாவட்டங்களில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு நிலையங்களின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன
M 2.5 PM நுண்துகள்களால் ஒரு கன மீட்டருக்கு இறப்பு விகிதம் 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது
- இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 82 சதவீதம் (1.1 பில்லியன்) மக்கள் WHO பரிந்துரைத்த அளவை விட அதிக மாசுபாடு உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்
விரைவு தீர்வுகளுக்கான பரிந்துரைகள்:
1. பயிர் எரிப்பைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள்
2. தற்போதைய சுற்றுச்சூழல் விதிமுறைகளை மேம்படுத்துதல்
3. காற்று மாசுபாட்டைக் குறைக்கவிரைவான நடவடிக்கைகள்
குறிப்பிடத்தக்க வகையில், 2024 நவம்பர் 20 அன்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தரவரிசையில், தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகியவை இந்தியா வின் முதல் 10 தூய்மையான நகரங்களில் இடம் பெற்றுள்ளன.