india

img

ஜப்பான் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படும் எப்எஸ்என்எல் நிறுவனம்

புதுதில்லி பொதுத்துறை நிறுவன மான பெரோ ஸ்க்ராப் நிகாம் லிமி டெட் (எப்எஸ்என்எல் FSNL - Ferro Scrap Nigam Limited) நிறுவனம் நாட்டின் எஃகு துறையில் முன் னணி பங்கு வகிக்கிறது. மினி ரத்னா-II வகை நிறுவனமான இந்த எப்எஸ்என்எல், இரும்பு கழிவு களை மறுசுழற்சி செய்து எஃகு பொதுத்துறை ஆலைகளான பிஎச்இஎல் (BHEL) ஹரித்வார் உள்ளிட்ட ஆலைகளுக்கு ஸ்கி ராப்புகளை (மறுசுழற்சி செய்யப் பட்ட இரும்பு) வழங்கும் முக்கிய நிறுவனமாக உள்ளது. இத்தகைய சிறப்புடன் செயல்பட்டு வரும் எப்எஸ்என்எல் நிறுவனத்தை கோனோய்கே (KONOIKE) என அழைக்கப்படும் ஜப்பான் நாட்டு தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், எப்எஸ்என்எல் தனியார்மயமாக்கல் பேரழிவு ஏற் படுத்தும் என மோடி அரசுக்கு இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் விடுத்துள்ள அறிக்கையில், “எப்எஸ்என்எல் தனியார்மயமாக் கலை எதிர்த்து செப்டம்பர் 28 முதல் மாபெரும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பெரோ ஸ்க்ராப் நிகாம் லிமிடெட் (FSNL) நிறுவன தொழிலாளர்களுக்கு இந்திய தொழிற்சங்க மையம் (CITU) வலுவான ஒற்றுமையை வழங்குகிறது. எப்எஸ்என்எல் நிறு வனத்தை தனியார் மயமாக்கி, நாட்டின் அனைத்து சட்ட பாது காப்புகளையும் இடித்து தள்ளு கிறது ஒன்றிய அரசு. மிகுந்த லாபம் ஈட்டும் இந்த மினி ரத்னா நிறுவ னத்தை கோனோய்கே என அழைக் கப்படும் ஜப்பான் தனியார் நிறுவனத்திற்கு பரிசாக வழங்கும் தேசவிரோத முடிவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று சிஐடியு கேட்டுக் கொள்கிறது.

ஆலோசனை கூட மேற்கொள்ளவில்லை

“தொழில் தகராறு சட்டம் 1946” மற்றும் பிற தொழிலாளர் சட்டங்க ளின் விதிகளையும் மீறி எப்எஸ் என்எல் நிறுவனத்தை விற்க ஒன்றிய அரசு தீவிரமாக முன்னேறி வருகிறது. இந்த தனியார்மய மாக்கல் திட்டத்திற்காக தலை மை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகம் எப்எஸ்என் எல் நிறுவனத்திடம் இரும்புப் பொ ருட்களை பெறும் 6 ஆலைகளின் (துர்காபூர், பர்ன்பூர், விசாகப்பட்டி னம், ரூர்கேலா, பொகாரோ, பிலாய்) தொழிற்சங்கங்களுடன் சமரசம் செய்திடும் முயற்சியில் ஈடு பட்டுள்ளது கவலைக்குரிய விஷயம் ஆகும். 

எஃகு என்பது நவீன இந்தியா வின் முதுகெலும்பு என்ற நிலை யில், செயில் (SAIL), ஆர்ஐஎன்எல் (RINL) ஆலைகள்  தொடக்கத்திலி ருந்தே ஸ்கிராப் கையாளுத லுக்காக எப்எஸ்என்எல் நிறுவ னத்தை முழுமையாகச் சார்ந்துள் ளன. ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில் எப்எஸ்என்எல் தனியார் மயமாக்கல் தொடர்பாக செயில் (SAIL), ஆர்ஐஎன்எல் (RINL) நிறு வனங்களுடன் ஒன்றிய அரசு எந்த  ஆலோசனையும் மேற்கொள்ள வில்லை.  குறிப்பாக எப்எஸ்என்எல் மேலிட நிர்வாகமும் கூட ஒன்றிய  அரசின் ரகசிய நடவடிக்கையை இன்னும் சரியாக அறிந்திருக்க வில்லை. 

எப்எஸ்என்எல் நிறுவனம் சுமார் ரூ.200 கோடி இருப்பு நிதியையும், ரூ.100 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும் 600க்கும் மேற்பட்ட ஊழியர்களையும், 5,000 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் கொண்டுள்ளது. மார்ச் 31, 2022 முடிவடைந்த ஆண்டில், எப்எஸ் என்எல் நிறுவனம் 2021-22ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால  ஈவுத்தொகையை ஒரு பங்குக்கு ரூ. 9.50 என செலுத்தியுள்ளது. மேலும் 36.54 லட்சம் மெட்ரிக் டன் ஸ்கிராப் மற்றும் 107.13 லட்சம் மெட்ரிக் டன்களை அனுப்பியது (மொத்தம் 143.67 லட்சம் மெட்ரிக் டன்). இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 12.88% அளவில் முன் னேற்றமடைந்துள்ளது எப்எஸ் என்எல் நிறுவனம். 

மேலும் எப்எஸ்என்எல் நிறுவ னம் 2021-22இல் 97.81% திறனில் இயங்கியது. எனவே எப்எஸ் என்எல் நிறுவனத்தின் நிபு ணத்துவத்தை யாரும் சவால் செய்ய முடியாது. இத்தகைய ‘தங்க முட்டை’ உற்பத்தி நிறுவ னத்தை எந்த சரியான காரணமும் இல்லாமல், தனியார்மயமாக்க லுக்கான வெறித்தனத்தின் காரண மாக ஒன்றிய அரசாங்கம் உடனடி யாக பலியாக்கத் துடிக்கிறது.

குறைத்து மதிப்பிடப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்

எஃகு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஜே.பி.சுக்லா கமி ட்டியின் அற்புதமான பரிந்துரை  ஏற்கனவே உள்ளது. அதன்படி எப் எஸ்என்எல் ஆனது செயில் நிறுவனத்தின் துணை நிறுவனமாக  அல்லது செயில், ஆர்ஐஎன்எல், எம்எஸ்டிசி ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக மாற்றப்பட வேண்டும். இந்தப் பரிந்துரையை அமல்படுத்தக் கோரி ஒன்றிய அரசை சிஐடியு பலமுறை அணுகியது. ஆனால் அதற்குப் பதிலாக சிறப்பாகச் செயல்படும் அரசு நிறுவனங்களை மிகக் கடு மையாகக் குறைத்து மதிப்பிட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது; இது இந்தியா வின் பொதுத்துறை சார்ந்த தொழில் துறைக்கும் ஒட்டு மொத்த மக்களுக்கும் நிரந்தர இழப்பாகும். எனவே சிஐடியு மோடி அர சாங்கத்தின் எதேச்சதிகார தேச விரோத நடவடிக்கையை மீண்டும் கண்டிக்கிறது. 

மேலும் வேலைநிறுத்தம் செய் யும் எப்எஸ்என்எல் தொழிலாளர்க ளுடன் வலுவான ஆதரவை வழங்கி அவர்களுடன் நிற்கிறது. இந்த பிரச்சனையை அனைத்து பிரிவு தொழிலாளர்களிடமும் கொண்டு செல்லவும், இந்த தனியார்மய மாக்கலுக்கு எதிரான போராட் டத்தில் அவர்களை ஒன்றுதிரட்ட வும் சிஐடியு அனைத்து பிரிவுக ளுக்கும் அழைப்பு விடுக்கிறது” என அறிக்கையில் தபன் சென் கூறி யுள்ளார்.