இந்திய ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக IRMS அதிகாரி சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவாரக உள்ள ஜெயா வர்மா சின்ஹா, வரும் 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், இந்திய ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக IRMS அதிகாரி சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறையில், 119 ஆண்டுகால வரலாற்றில் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்திய ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.