india

img

நிர்மலா சீதாராமன் மீது கிரிமினல் வழக்குப்பதிவு!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர் ஆதர்ஷ் ஐயர் தாக்கல் செய்த மனுவில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, பாஜக முன்னாள் எம்.பி நளின் குமார் கட்டீல் ஆகியோர் அமலாக்கத்துறையை பயன்படுத்தி மிரட்டல் விடுத்து தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி ரூ.8,000 கோடிக்கு மேல் பணம் பறித்ததாக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் நிர்மலா சீதாராமன்,  ஜே.பி.நட்டா, கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் விஜயேந்திரா, நளின் குமார் கட்டீல் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது 384, 120B, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.