புதுதில்லி, செப். 2 - “வழக்கொன்றில் குற்றம்சாட்டப் பட்டவர் என்பதற்காக மட்டுமல்ல, குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும் கூட, அவரது வீட்டை இடிக்க முடியாது” உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.
மேலும், “சட்டவிரோதக் கட்டுமானங்களை இடிப்பது தொடர்பாக நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும்” என நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில், குற்ற வாளிகளைத் தண்டிக்கிறோம் என்ற பெயரில், அப்பாவி முஸ்லிம்களின் வீடுகளை தேடிப்பிடித்து இடித்துத் தரைமட்டம் ஆக்குவது தொடர் அராஜகமாக நடந்து வருகிறது. உ.பி. பாஜக முதல்வர் ஆதித்யநாத், இந்த புல்டோசர் கலாச்சாரத்தைத் துவங்கி வைத்தார். அதனை மத்தியப் பிர தேசம், ராஜஸ்தான் என பாஜகவின் மற்ற மாநில முதல்வர்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கு ‘புல்டோசர் நீதி’ என்று நாமகரணமும் சூட்டிய அவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான வீடுகள், கட்டடங்கள் மட்டுமன்றி, அவர்களது உற வினர்களின் வீடுகளையும், நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளை ஏவி, தரைமட்டமாக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த முறையில் இதுவரை நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டம் ஆக்கியுள்ளனர். தொட ர்ந்து இடித்தும் வருகின்றனர்.
எனவே, “இந்த ‘புல்டோசர் நட வடிக்கை’ சட்டத்திற்குப் புறம்பா னது”; என்றும், “அடிப்படை உரிமை களை மீறுவது” என்றும் அறிவிக்கக் கோரி, புல்டோசர் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஹூசைன் என்பவரும், ராஜஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் என்பவரும் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பான ‘ஜமியத் உலமா-இ-ஹிந்த்’ அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, சி.யு. சிங் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது, “‘புல்டோசர் நீதி’ என்ற பெயரிலான பழிவாங்கும் நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்; மேலும், இதுபோன்ற நடவடிக்கை களைத் தடுக்க நாடு முழுமைக்கு மான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சட்டவிரோத கட்டடங் களை இடிக்க நகராட்சி சட்டங்கள் அனுமதி வழங்குகின்றன; மாநில அர சுகள் குறிவைத்து அல்லது வகுப்பு வாத அடிப்படையில் இடிப்பு நட வடிக்கைகள் எதையும் மேற்கொள்வ தில்லை. சட்டப்படி அவ்வாறு செய்ய வும் முடியாது” என்றார்.
மேலும், “குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, அவரது சட்டவிரோதக் கட்டுமானம் குறித்து ஏற்கனவே நக ராட்சி அதிகாரிகளிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கும் பட்சத்தில், அவருடைய சட்ட விரோதக் கட்டடம் இடிக்கப்படும் என்று எச்சரித்திருக்கும் பட்சத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற் காக இடிக்காமல் இருக்க முடி யுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
“அதற்கு, சட்டவிரோதமான கட்டுமானங்களை இடிப்பதற்கு நகராட்சி சட்டங்கள் அனுமதி வழங்கு கின்றன என்பது உண்மை தான்” என்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஆனால், “அந்த இடிப்பு நடவடிக்கை கள் ‘தடாலடியாக’ செயல்படுத்தப் பட்டதாகத் தெரிகிறது” என்றார்.
மேலும், “பொதுச் சாலை களுக்கு இடையூறாக உள்ள எந்த வொரு சட்ட விரோத மதக் கட்டமைப் பையும் பாதுகாக்க மாட்டோம். அது கோவில்களாகவும் இருக்கலாம்...” என்று குறிப்பிட்ட நீதிபதி பி.ஆர். கவாய், “சட்டத்தில் வகுத்துள்ள நடைமுறையின்படி மட்டுமே அசையா சொத்துக்களை இடிக்க முடியும்” என்று கூறினார்.
அத்துடன், “குற்ற வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத் திற்காக ஒருவரின் வீட்டை இடிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி பி.ஆர். கவாய் தலைமை யிலான அமர்வு, “குற்ற வழக்கில் ஒரு வர் குற்றவாளி என நீதிமன்றமே தீர்ப்பளித்திருந்தாலும், அவருக்குச் சொந்தமான வீட்டையோ கட்டடத் தையோ இடிக்க முடியாது” என்றும் குறிப்பிட்டது.
இறுதியாக, “அங்கீகரிக்கப் படாத வீடுகள், கட்டடங்களை கண்ட றிந்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது, நியாய மான விசாரணை நடத்துவது போன்ற நடைமுறைகளை சீரமைக்க, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட வேண்டும்” என்று கூறிய உச்சநீதி மன்ற நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.