புதுதில்லி, ஜூலை 22- நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக “இந்தியா” கூட்டணி எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மக்கள வையில் ஒன்றிய அரசு கடுமை யாக திணறியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்களன்று தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் மக்களவையில் நீட் முறைகேடு விவகாரம் தொடர் பாக விவாதம் செய்ய வேண்டும் என கேள்வி நேரத்தில் “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் முறையிட்டனர்.
தர்மேந்திர பிரதான் மழுப்பல்
தமிழ்நாட்டைச் சேர்ந்த காங் கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “நீட் முறைகேடுகளுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிர தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று பேசினார். தொடர்ந்து திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி, “நீட் தேர்வால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ஓரிரு இடங்களில் மட்டும் தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும்” என மழுப்பலாக கூறினார்.
தொடர்ந்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், “வினாத்தாள் கசிவுகளில் ஒன்றிய அரசு புதிய பல சாதனைகள் படைத்துள்ளது . நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். விசாரணை யிலும் பல அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமாகின்றன. கைதுகள் நடக்கின்றன. தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருக்கும் வரை நீட் விவகாரத்தில் மாண வர்களுக்கு நீதி கிடைக்காது” என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின் படி முடிவுகள் வெளியிடப்பட்டுள் ளன. இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை; ஆனால் அகிலேஷ் உத்தரப்பிரதேச முதல் வராக இருந்தபோது எத்தனை வினாத்தாள் கசிவுகள் நடந்தன என்ற பட்டியல் என்னிடம் உள்ளது” என்று பிரச்சனையை திசை திருப்ப முயன்றார்.
‘பணம் இருந்தால் விலைக்கு வாங்கலாம்’
உடனே எழுந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவின் தேர்வு முறைகளில் பெரிய பிரச்சனை உள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அமைச்சர் தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம் சாட்டியுள்ளார். இங்கு என்ன நடக்கிறது என்பதன் அடிப்படைகள் கூட அவருக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். பணம் இருந்தால், தேர்வுகளை விலைக்கு வாங்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது. இந்த உணர்வு எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கும் இருக்கிறது. இந்த சிக்கலை சரிசெய்ய அரசாங்கம் என்ன செய்கிறது?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு “நீங்கள் கத்தினால் பொய்கள் உண்மையாகிவிடாது. நாட்டின் தேர்வு முறை குப்பை என்று அழைக்கும், ராகுல் காந்தி யின் பேச்சை நான் கண்டிக்கிறேன். 2010இல் காங்கிரஸ் அரசின் கல்விச் சீர்திருத்தங்களுக்கான மூன்று மசோதாக்களை அமைச்சர் கபில் சிபல் கொண்டு வந்தார். யாருடைய அழுத்தத்தால் அந்த மசோதா வாபஸ் பெறப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அழுத்தத்தால் வாபஸ் பெறப்பட்டதா?” என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாய்ந்தார்.
மொத்தத்தில், நீட் முறைகேடு விவகாரம் “இந்தியா” எம்.பி.க்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காமல் ஒன்றிய அரசு மழுப்பலான பதில்களை மட்டுமே கூறியும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பிரச்சனைகளை கூறி திசை திருப்பும் வேலையை மட்டுமே செய்தது.