india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

“கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்கும் வகையில் கர்நாடக தொற்று நோய் தடுப்புச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.அதன்படி நகரங்களில் சுகாதாரம் பேணாதவர்களுக்கு ரூ.400, கிராமங்களில் ரூ.200, தனியார்நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும்’’ என கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறி யுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கி மின் பாக்யோங் பகுதியில் மேற்கு வங்கத்தில் உள்ள பெடோங்கில் இருந்து வந்த ராணுவ வாகனம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தங்கபாண்டி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 மாணவிகள் உயிரிழந்தனர். 

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டத்தில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

பாஜக - தெலுங்குதேசம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஆந்திராவில், பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தெலுங்குதேசம் எம்எல்ஏ  (திருப்பதி மாவட்டம் சத்தியவேடு தொகுதி) ஆதிமூலம் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

“தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கொடூரக் குற்றங் களை செய்யும் குற்றவாளி அல்ல. சமுதா யத்திற்கு கெஜ்ரிவால் அச்சுறுத்தலாக இல்லை.  அவருக்கு ஜாமீன் வழங்காதது ஆச்சர்யமாக உள்ளது”  என உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம் மேற்கொண்டார்.

“திட்டக் குறைபாடே சத்ரபதி சிவாஜி சிலை சேதமடைய காரணம் ஆகும். துருப் பிடிக்காத எஃகு மூலம் சிலை தயாரிக்கப்பட்டு இருந்தால்  சிலை சேதம் அடைந்திருக்காது. கடற்கரை சம வெளியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களில் துருப் பிடிக்காத எஃகுவை தான் பயன்படுத்த வேண்டும்” என பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சரு மான நிதின்கட்காரி கூறியுள்ளார். பாஜக கூட்டணி அரசு நிறுவிய சிலையில் திட்ட குறைபாடுகள் இருந்ததை ஒன்றிய மூத்த அமைச்சரே சுட்டிக்காட்டி இருப்பது மகாராஷ்டிரா அரசியலில் சலசலப்பை ஏற் படுத்தியுள்ளது.

நொய்டா

பாஜக ஆளும் உ.பி.,யில் கொடூரம்
பள்ளி வளாகத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை

பெண்கள், சிறுமிகளுக்கு பாது காப்பு இல்லா மாநிலம் மற்றும் நாட்டிலேயே அதிகமாக பாலியல் வன்கொடுமைச் சம்பவங் கள் நடைபெறும் மாநிலம் என இரண்டு மோசமான அவப்பெயர்களை பெற் றுள்ள பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் குற்றச் சம்ப வங்கள் அரங்கேறாத நாட்களே இல்லை என்ற நிலைமை உள்ளது. 

4 நாட்களுக்கு முன் உத்தரப்பிர தேசத்தின் பரூக்காபாத்தில் 2 தலித் சிறுமி மற்றும் 13 வயது சிறுமி பாலியல் வன் கொடுமை (வெவ்வேறு சம்பவங்கள்) செய்யப்பட்ட சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், செவ்வாயன்று பள்ளி வளாகத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது.

நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6 வயது சிறுமி பள்ளி வளா கத்தில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது பள்ளியில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவர், சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை  ஏற்படுத்தியுள்ளது. செக்டர்-24 போலீ சார் விசாரணை மட்டும் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.