போபால் கடந்த 2014இல் தேர்தல் பிரச் சாரத்தின் பொழுது மோடி ஆண்டுக்கு 2 கோடிப் பேரு க்கு வேலைவாய்ப்பு அளிப்பேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் மோடி பிரதமர் ஆன பின்பு ஏற்கெனவே இருந்த வேலைகள் பறிக்கப்பட்ட நிலையில், நாட்டில் இளைஞர்களுக்கு வேலை யின்மையும், வறுமையும் பிரதான பிரச்சனைகளாக உள்ளன.
இந்நிலையில், வேலையின் மை, வறுமையை சாதகமாக பயன் படுத்தி இந்திய இளைஞர்களை கொலை, கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளாக சமூகத்தில் மேம் பட்ட பிரிவினரால் மாற்றப்பட்டு வரு கிறார்கள்.இதற்காக சட்டவிரோ தமாக சில கிராமங்கள் பயிற்சிப் பள்ளிகளாக இயங்கி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருட்டு பயிற்சிக்கு ரூ.3 லட்சம் கட்டணம்
பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து சுமார் 117 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காடியா, குல்கேடி, ஹல்கேடி ஆகிய கிரா மங்கள் குற்றவாளிகளின் “நர்சரிப் பள்ளிகள்” என பெயர் பெற்றுள் ளது. ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள இந்த 3 கிராமங்களிலும் குழந்தைகளுக்கு, திருட்டு உள் ளிட்ட கொள்ளையடிக்கும் செயல்க ளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
12-13 வயதுக்குட்பட்ட குழந்தை கள் குற்றச் செயல்களை கற்றுக் கொள்ள வேண்டும் என குழந்தைக ளின் பெற்றோரே இத்தகைய குற்றங்களை கற்றுக் கொடுக்கும் கிராமங்களுக்கு அவர்களை அனுப்புவதாகவும், இந்த பயிற்சி க்கு குழந்தைகளை சேர்த்துவிடும் போது ஒவ்வொரு குடும்பமும் ரூ.2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை கட்டணம் செலுத்துகின்றனர்.
இந்த குற்றவியல் நர்சரி பள்ளி களாக உள்ள கிராமங்களில், குற்றச்செயல்களை கற்றுத்தரும் ஒவ்வொரு கும்பலும் தங்களிடம் சேரும் குழந்தைகளுக்கு கூட்ட மான இடங்களில் பைகளைப் பறிப்பது, பிக் பாக்கெட் அடிப்பது, போலீசாரிடம் - பொதுமக்களிடம் சிக்கிக்கொள்ளாமல் வேகமாக ஓடுவது, பிடிபட்டால் அவர்கள் கொடுக்கும் தர்ம அடியை தாங்கு வதற்கு தேவையான உடல் வலி மைக்கான பயிற்சிகளும், இரக்க மற்ற முறையில் சட்ட விரோதமாக செயல்படுவதற்கான பயிற்சிக ளும் அளிக்கப்படுகிறது.
ஒரு வருட பயிற்சிக்குப் பிறகு அந்தக் கும்பலின் தலைவனிடம் இருந்து குழந்தைகளின் பெற் றோர்கள் ஆண்டுதோறும் ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரை வாங்கிக் கொள்கிறார்களாம்.
மொத்த கிராமத்தையும் வளைத்துப் போட்ட கும்பல்கள்
இந்த கிராம மக்கள் புதிதாக ஒருவர் கிராமத்திற்குள் நுழைந் தால் உடனடியாக செய்திகளை குற்றவியல் கும்பலின் தலை வர்களுக்கு தெரிவித்து விடுகிறார் கள். இந்த கிராமங்கள், நாடு முழு வதும் உள்ள காவல்துறைக்கு பெரிய குற்றங்களை செய்த குற்றவாளிகளைப் பிடிக்கும் ஹாட்ஸ்பாட் ஆக மாறியுள்ளன.
இந்த கிராமங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு மாநிலங்களில் திரு மண விழாக்களில் திருட்டுச் சம்ப வங்களில் ஈடுபடுவதாக என்டிடிவி குறிப்பிட்டுள்ளது.
ஏல முறையில் திருட்டில் பணியமர்த்தப்படும் குழந்தைகள்
கிராமத்தில் உள்ள செல்வந்தர் கள் பயிற்சி பெற்ற ஏழைக் குழந்தை களை ஏல முறை மூலம் 1-2 வரு டங்கள் வரை இத்தகைய திருட்டு வேலைக்கு பணி அமர்த்துகிறார் கள். இதன் மூலம் அவர்கள் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான லாபத்தை சம்பாதிக்கிறார்கள்.பயிற்சி பெற்றவுடன் இந்தக் குழந் தைகள் தாங்கள் கட்டிய கட்ட ணத்தை விட ஐந்து முதல் 6 மடங்கு லாபத்தை பெறுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் கும்பலிலிருந்து வெளியேறி சுயமாக பல திருட்டு களில் ஈடுபடுகிறார்கள். இந்த குற்ற நடவடிக்கையின் நெட்வொர்க் மிகப்பெரியது. காடியா, குல்கேடி, ஹல்கேடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட தனி நபர்கள் மீது நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 8,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொதுவாக இந்த குற்றப் பள்ளிகளில் சேர்த்து விடப்படும் குழந்தைகள் கல்வி கிடைக்காத, குறைந்த கல்வியறிவு, வேலை யின்மை, ஏழ்மையான குடும்பங்க ளில் இருந்து வந்தவர்கள். இவர்க ளது மோசமான பொருளாதா ரத்தைப் பயன்படுத்திக்கொண்டு வசதி படைத்த பணக்காரர்கள் ஒன்றிணைந்து கொள்ளைய டிக்கும் பணியில் ஈடுபடுத்துகிறார் கள் என்பது குறிப்பிடத்தக்கது.