india

img

கொல்கத்தா மருத்துவ மாணவி வழக்கு

புதுதில்லி  மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கே. மருத்துவ மாணவி மரணம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் 2-ஆம் கட்ட விசாரணை வியாழனன்று நடை பெற்றது. 

மருத்துவர்கள்  போராட்டம் வாபஸ்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், விசாரணையின் பொழுது தலைமை நீதிபதி சந்திரசூட், “எங்களுக்கும் மருத்துவர்கள் மீது நலனும் அக்கறையும் உள்ளது. எனவே இச்சூழலை அரசியலாக்க வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்யும். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர் உட னடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். அமைதியான முறையில் போராடிய மருத்துவர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அனைத்து மருத்துவமனை நிர்வாகத்துக்கும் உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தர வின்படி பணிக்குத் திரும்பும் மருத்து வர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த அனைத்து மாநில அரசு தலை மைச் செயலாளர்கள், காவல் துறை டிஜிபிக்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் உத்தர விட வேண்டும். மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு வர வேண்டும். அவர்களை நாடி வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் பொது சுகாதார உள்கட்டமைப்பு எவ்வாறு இயங்கும்? அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்து வர்கள் பணியைத் தொடர வேண்டு கோள் விடுக்கிறேன்” என கூறினார்.

அப்போது பயிற்சி மருத்துவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத்,”நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேசிய பணிக்குழு வில் (NTF) பயிற்சி மருத்துவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத் தார். தலைமை நீதிபதி சந்திரசூட், “உங்களின் இந்த நியாயமான கோ ரிக்கையை ஏற்கிறோம்” எனக் கூறி னார். நாடு முழுவதும் மருத்துவர் கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தின் அறி வுறுத்தலை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டு பணிக்குத் திரும்பு வதாக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க அரசுக்கு  சரமாரி கேள்வி

தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் உள்ள  நீதிபதி பர்திவாலா,”மேற்கு வங்க காவல்துறை பின்பற்றிய நடை முறையை தனது 30 ஆண்டுகால அனுபவத்தில் கண்டதில்லை. மருத்துவ மாணவி கொலையை சந்தேக மரணம் என்று காலை 10.30 மணிக்கு பதிவு செய்துள்ளனர். பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவம் சாரா கண்கா ணிப்பாளருக்கு என்ன வேலை?  மருத்துவம் சாரா கண்காணிப்பா ளரா? யார் அது? கொல்கத்தா பெண்  மருத்துவர் கொலை தொடர்பாக வழக்கு பதியும் முன்பே உடற் கூறாய்வு நடத்தப்பட்டது எப்படி? சந்தேக மரணம் என்று வழக்கு பதியும் முன்பே உடற்கூறாய்வு நடத்தப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆகஸ்ட் 9 அன்று காலையில் போலீஸ் டைரியில் பெண் மருத்துவர் கொலை பற்றி குறிப்பு பதியப்பட்டு உள்ளது. எனினும் இரவு 11.45 மணிக்குத்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது என்பது உண்மைதானா?” என கேள்வி எழுப்பினார்.

தடயங்களை திரட்ட  11 மணி நேரமா?

தொடர்ந்து தலைமை நீதிபதி சந்திரசூட்,”காலை 10.10 மணிக்கு கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை பற்றி போலீஸ் பொது டைரியில் குறிப்பு பதியப்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்தை போலீஸ் தன் கட்டுப்பாட்டில் இரவு 11.30 மணிக்குத்தான் கொண்டு வந்துள் ளது. காலை 10.10 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை என்ன நடந்தது? தடயங்களை திரட்ட 11 மணி நேரமா?” என அவர் கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக மருத்துவ மாணவி கொலை குறித்து முதலில் விசாரித்த கொல்கத்தா காவல்துறையும், இத னையடுத்து விசாரணையை மேற் கொள்ளத் தொடங்கிய சிபிஐயும் உச்சநீதிமன்றத்தில் தங்கள் அறிக்கை களை தாக்கல் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.