india

img

பழங்குடியினர் கல்வி கற்பதை பாஜக விரும்பவில்லை

பழங்குடியின மக்களின் குழந்தைகள் கல்வி கற்பதை பாஜக விரும்பவில்லை என இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.  அசாம் மாநிலம் மஜூலியில் பழங்குடியின மக்களிடம் நடைபெற்ற உடையாடலில் ராகுல் காந்தி கூறுகை யில், “நாங்கள் (காங்கிரஸ்) உங் களை (பழங்குடியினர்) ஆதிவாசி கள் என்று அழைக்கிறோம்.

பாஜக  உங்களை வனவாசிகள் என்றழைக் கிறது. இரண்டிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. பாஜக உங்களை காடு களிலேயே வைத்திருக்கவே விரும்பு கிறது. உங்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கல்வி கற்பதை பாஜக விரும்பவில்லை. உங்களின் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதையோ, தொழில் செய்வதையோ பாஜக விரும்பவில்லை. உங்களிடம் இருந்து எடுக்கப்பட்டதை மீண்டும்  வழங்குவதற்கு நாங்கள் விரும்பு கிறோம். உங்களது நிலம், வனம் மற்றும் நீர் ஆகியவை மீண்டும் உங் களிடம் வழங்கப்பட்டாக வேண்டும். அதற்காக நாங்கள் சட்டம் இயற்று வோம்.

பல மாதங்களாக மணிப்பூரில் உள்நாட்டுப் போர் நடப்பது போன்ற சூழல் நிலவி வருகிறது, இருப்பினும் பிரதமர் மோடி ஒருமுறை கூட அங்கு செல்லவில்லை. ஆனால் நாங்கள் மணிப் பூரில் இருந்தே இந்த நடைபய ணத்தை துவக்கினோம். நாகா ஒப்பந்தம் கொண்டுவருவதில் பாஜக அரசு  தோற்றுவிட்டது. இந்த ஒப்பந்தத்தை கொண்டுவருவதாக மோடி 9 ஆண்டு களுக்கு முன்பு வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

நடைபயணத்தை சீர்குலைக்க பாஜக தீவிரம்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் மணிப்பூர் மாநிலத்தை கடந்து பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நடைபயணத்தில் மக்கள் திரளாக பங்கேற்பதாலும், நாட்டிலேயே ஊழல் மிகுந்த முதல்வர் என்றால் “அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா” என ராகுல் காந்தி கூறியதாலும், நடைபயணத்தை சீர்குலைக்க அசாம் பாஜக அரசு தீவிரமாக களமிறங்கி யுள்ளது. இதன் முதல்கட்டமாக நடைபயணம் வழிமாறி சென்றதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் சிலர் மீது ஜோர்ஹட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.