சோனியா காந்திக்கும், ஹங்கேரி-அமெரிக்க தொழிலதி பர் ஜார்ஜ் சோரஸுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பாஜக கூறுகிறது. இது கேலிக்குரியது. முதலில் அதானி உள்ளிட்ட விவகாரங்களை ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தில் விவாதிக்கட்டும். பிறகு மற்ற விஷயங்களை பற்றி பேசலாம். அதானி பற்றி பேசினாலே பாஜகவினர் நாடாளுமன்றத்தில் அலறுவது ஏன்?
சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்
அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் போதே பெரும்பான்மை சமூகம் நாட்டைச் சீரழித்துவிடும் என்று அம்பேத்கர் கூறியிருந்தார். அதே போலத் தான் பாஜகவின் இந்துத்துவா நாட்டில் பிளவை உருவாக்க முடியும் என்று நிரூபித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் (சரத்) தலைவர் ஜிதேந்திர அவ்காத்
நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் ஆளுங் கட்சியினர் குழப்பம் விளைவிப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். அதானி விவகாரத்தில் எங்களுக்கு பதில் வேண்டும். பாஜக நாடாளுமன்றம் இயங்கு வதை விரும்பவில்லை என்றால், நாங்களும் இனிமேல் முழக்கங்களை எழுப்புவோம்.
ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்
அதானி பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்புவதை பாஜக விரும்பாததால், தேவையற்ற பிரச்சனைகளை அவையில் எழுப்புகின்றனர். நாடாளுமன்றம் செயல்படுவதை ஆளும் கட்சி விரும்பாதது முதல்முறையாக நடந்துள்ளது. இது நகைப்புக்குரியது.
காங்கிரஸ் எம்.பி., ரஞ்சித் ரஞ்சன்
தில்லி பகுதி கடும் குளிரில் நடுங்கி வருகிறது. டிசம்பர் 10ஆம் தேதி முதல் தில்லியின் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக குறைந்து கடுமையான குளிரை சந்திக்க நேரிடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) எச்சரிக்கை விடுத்துள்ளது. தில்லியைப் போல பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளிலும் டிசம்பர் 14-ஆம் தேதி வரை குளிர் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.