india

img

பெங்களூரு குண்டு வெடிப்பு பாஜக நிர்வாகிக்கு தொடர்பு

பெங்களூரு, ஏப். 5- கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ‘ராமேஸ்வரம் கபே’ உண வகத்தில் கடந்த மார்ச் 1 அன்று இரண்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.  இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்த நிலையில், வழக்கை விசாரித்து வரும் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) இதுவரை 10க்கும் மேற்பட்டோரை தங்கள் வளையத் திற்குள் கொண்டு வந்து அவர்களி டம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் பாஜகவின ருக்கும் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகிய நிலையில், வெள்ளியன்று பெங்களூரு பகுதியின் முக்கிய பாஜக நிர்வாகியான சாய் பிரசாத்தை என்ஐஏ அதிகாரிகள் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக நிர்வாகி சாய் பிரசாத், குண்டு வைத்ததாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளார் என என்ஐஏ அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ராமேஸ்வரம் கபே உணவக குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியும், தமிழ்நாடு, கேரள மாநி லத்தைச் சேர்ந்தவர்களும் தான் கார ணம் என்றும்; மசூதியை இடித்து நொறுக்கினால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கலாம் என்றும் ஒன்றிய பாஜக அமைச்சர் சோபா கரந்தலாஜே உள்ளிட்ட பாஜகவினர் மக்களவை தேர்த லுக்காக கொக்கரித்து வந்த நிலை யில், இந்த குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக நிர்வா கிக்கும் தொடர்பு உள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.