மணிப்பூர் கலவரத்தால் வட கிழக்கு மாநிலங்களிலும், மோடியின் அடாவடியை நன்கு புரிந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களும், இழிவான பேச் சுக்களால் இந்தி பேசும் மாநிலங்க ளில் ராஜபுத்திர மக்களும், விவ சாயிகளின் மீதான அடக்குமுறை யால் பஞ்சாப், ஹரியானா, உத்த ரப்பிரதேச மாநிலங்களிலும் என மோடி மற்றும் பாஜகவிற்கு எதி ரான அலை தீவிரமடைந்து வரும் விஷயம் நாடறிந்தது. குறிப்பாக முதல்கட்ட வாக்குப்பதிவு ஆரம் பித்த நாளிலிருந்து, தற்போது நிறைவு பெற்ற 6 கட்ட வாக்குப்பதிவு வரை “கோடி மீடியா” தவிர்த்து மற்ற கருத்துக் கணிப்பு மற்றும் புல னாய்வு ஊடகங்கள் வெளியிட் டுள்ள கருத்துக்கணிப்பில் “இந் தியா” கூட்டணியே அதிக இடங் களை கைப்பற்றி ஆட்சியை கைப் பற்றும் என தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதனால் மோடி பிரதமர் பதவியை மறந்து வெறுப்பு பேச்சையும், புலம்பல் பேச்சையும் பிரச்சாரமாக மேற் கொண்டு வருகிறார்.
இமாச்சலப் பிரதேசத்தில் தவியாய் தவிக்கும் பாஜக
இந்நிலையில், கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் இமாச்சலப் பிரதேசத்திலும் பாஜக பலத்த அடி யை வாங்கவுள்ளது. இமயமலைச் சாரலில் உள்ள இமாச்சலப்பிர தேச மாநிலத்தில் உள்ள 4 மக்க ளவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 7ஆவது கட்டத்தில் ஜூன் 1 அன்று வாக்குப்பதிவு நடைபெறு கிறது. இதற்கான பிரச்சாரம் வியா ழனன்று மாலை ஓய்ந்தது. இந் நிலையில், புதனன்று ஆப்பிள் விவ சாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனைத்து விவசாய சங்கங்களும் அடங்கிய சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அமைப்பு, “இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள ஆப்பிள் விவசாயிகள், தொழிலா ளர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவ ரான லோகிந்தர் பிஷ்ட் கூறியதா வது: “பிரதமர் நரேந்திர மோடி ஆப் பிள் விவசாயிகள் குறித்து பல்வேறு திட்டங்களை கூறி பிரச்சாரம் மேற் கொண்டார். ஆனால் இது வெறும் பிரச்சாரமாகவே உள்ளது. இமாச் சலப்பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டு களில் ஆப்பிள் விவசாயிகளின் அவலநிலை மிக மோசமாக உள் ளது. ஆப்பிள் விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண மோடி அரசு எதுவும் செய்யவில்லை. அத னால் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள், ஆப்பிள் விவ சாயிகள் என அனைத்து தரப்பின ரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
எஸ்கேஎம் விவசாய அமைப் பின் இந்த அறிவிப்பு பாஜகவிற்கு பலத்த சேதாரத்தை ஏற்படுத்த வாய்ப் புள்ளது. காரணம் மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளில் சிம்லா, மண்டி, குலு மற்றும் கின்ன வுர் மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளில் ஆப்பிள் விவசாயி கள் உள்ளனர். மேலும் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் ஆப்பிள் சார்ந்த தொழிலையே நம்பியுள்ளனர். கிட்டத்தட்ட சிம்லா, மண்டி, ஹமீர் பூர், கங்காரா ஆகிய 4 மக்களவை தொகுதிகளிலும் ஆப்பிள் சார்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ள நிலையில், எஸ்கேஎம் விவ சாய சங்கம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருப்பது பாஜகவிற்கு கலக்கத்தை ஏற் படுத்தியுள்ளது.