india

img

சிபிஎம் தலைவரை கொன்ற கொலையாளிகளை கைது செய்திடுக!

பீகார் மாநிலம் மாதேபுரா பகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரான ராஜேஷ் ஹன்ஸ்தா கடந்த அக்டோபர் மாதம் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆகியும், இன்னும் கொலைக் குற்றவாளிகளை கைது செய்யாமல் பீகார் காவல்துறை அலட்சியமாக  செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொலையாளியைக் கைது செய்யவும், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை  வழங்கக் கோரி  சனியன்று மாதேபுராவில் சிபிஐ(எம்) சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி,  மாநில செயலாளர் லாலன் சவுத்ரி உள்ளிட்டோர் உரையாற்றினர்.