india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

“இந்தியா” கூட்டணியின் புதிய தலைமை தொடர்பாக எந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டாலும், அதை கூட்டணி இணைந்து கூட்டாக முடிவெடுக்கும். ஏனென்றால் “இந்தியா” கூட்டணி என்பது பல்வேறு கட்சிகளின் கூட்டு அமைப்பு ஆகும்.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

விஎச்பி நிகழ்ச்சியில் தேவையின்றி மதக் கருத்துக்களை பேசிய அலகாபாத் நீதிபதி சேகர் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஆனால் இதற்கு பாஜகவும் ஒத்துழைக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

மிஷன் சக்தி திட்டம் மூலம் மக்கள் பெறும் சம்பளத்தை நிறுத்த பாஜக தலைமையிலான மாநில அரசு சதி செய்கிறது. மிஷன் சக்தி இயக்கத்தில் 70 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் உள்ளனர். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக்

அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பாஜகவினர் பயப்படுகிறார்கள். விவாதம் நடத்தினால் உண்மை வெளிவரும் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் தான் அமர்வில் நரேந்திர மோடியை காணவில்லை. அவர் அவைக்கு கூட வரவில்லை. விலை உயர்ந்த மின்சாரத்தை பொதுமக்களுக்கு விற்று லாபம் ஈட்ட அதானி பல ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பொதுமக்களுடன் தொடர்புடையதாக இருப்பதால் கண்டிப்பாக இந்தப் பிரச்சனையை எழுப்புவோம்.

காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி

சபரிமலையில் கடந்த 2 வாரங்களாக தினமும் சராசரியாக 75 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். டிசம்பர் 8ஆம் தேதி மட்டும் சற்று குறைவாக 65 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். டிசம்பர் 5ஆம் தேதி 80,600 பேரும், 6ஆம் தேதி 87,736 பேரும், 7ஆம் தேதி 79,296 பேரும், டிசம்பர் 9ஆம் தேதி  சற்று அதிகமாக 87,390 பேரும் தரிசனம் செய்தனர்.

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் ஒன்றிய வெளியுறவுத்துறை அமை ச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா (92) காலமானார்.

கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே இடஒதுக் கீடு கோரி பஞ்சமசாலி சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். போரா ட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு முன்னேற முயன்ற நிலையில் போலீசார் தடியடி நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

“கியூ காமர்ஸ் வணிகம் காரணமாக ஆயிரக்கணக் கான மளிகைக் கடைகள் மூடப்பட்டு வருவது, கவலை அளிக்கிறது” என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

“அவை நடவடிக்கைகளில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்பதை ஆளும் கட்சியினரே முடிவு செய்கிறார்கள். நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது பாஜகவினர்தான்” என திமுக எம்.பி., திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

தில்லி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆம்  ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரி வால், நகரின் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு வழங்குவதாக அறிவித்தார்.

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள  பிரபல சிற்றுண்டி உணவகமான “காங்லா ஃபுட்” அலுவலகத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழ மை வெடிகுண்டுடன் மிரட்டல் கடிதம் கண்டெ டுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

விவசாயிகள் பிரச்சனை, வேலையில்லா திண்டா ட்டம் உள்ளிட்டவைகளை தீர்க்க வலியுறுத்தி பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.

மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரை நீக்குவதற்கான தீர்மானம் மிகவும்்வருத்தம் அளிக்கக்கூடியதாக உள்ளது என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.