இந்து குழந்தைக்கும், முஸ்லிம் குழந்தைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ற பெயரில் சர்ச் சைக்குரிய வகை யில் கருத்துக்களை கூறியுள்ளார் அலகா பாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலகா பாத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நீதிபதி சேகர் குமார் பேசுகையில், “எங்கள் (இந்து) குழந்தைகள் சகிப்புத் தன்மை, அகிம்சை மற்றும் கனிவான குணத்தை கொண்டவர்கள். காரணம் இந்து குழந்தைகள் மந்திரங்களை உச்ச ரிக்கிறார்கள்; வேதங்களைப் படிப்பார் கள். ஆனால் முஸ்லிம் குழந்தைகள் விலங்குகள் வெட்டப்படுவதைக் கண்டு அவர்கள் கருணையுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது” என மத வெறியைப் பரப்பும் நோக்கத்தில் கூறி னார். ஜனநாயகத்தை காக்கும் ஒரு நீதிபதியே மத வன்முறையை பரப்பும் நோக்கத்தில் பேசியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.