புதுதில்லி, ஜன. 17 - விவசாயத்திற்கு தாங்கள் அதிகமான நிதியை ஒதுக்கி வருகிறோம் என்று மோடி அரசு ஜம்பம் அடிப்பது உண்டு. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ஒதுக்கிய பணத்தில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் செலவிடாமல் தன்வசமே எடுத்துக் கொண்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மட்டும், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையானது, வரு டாந்திர ஒதுக்கீடான ரூ. 1 லட்சத்து 24 ஆயிரம் கோடியில் ரூ. 21 ஆயிரத்து 005 கோடியே 13 லட்சத்தை ஒன்றிய அரசிடமே வேளாண் அமைச்ச கம் திரும்ப ஒப்படைத்துள்ளது. இதேபோல 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1லட்சம் கோடிக்கும் மேலான தொகையைத் திரும்ப ஒப்படைத்துள்ளது. “2022-2023 ஆம் ஆண்டிற்கான கணக்குகள் ஒரு பார்வை” என்ற தலைப்பில் வேளாண் அமைச்சகத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை (DA&FW) கடந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2022 – மார்ச் 2023) ஆண்டுக்கான வருடாந்திர ஒதுக்கீடான ரூ. 1 லட்சத்து 24 ஆயிரம் கோடியில் ரூ. 21 ஆயிரத்து 005 கோடியே 13 லட்சத்தைத் திரும்ப ஒப்படைத்தது. இது முந்தைய 2021-22 ஆம் ஆண்டில் துறையால் திருப்பி ஒப்படைக்கப் பட்ட தொகையை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும், முந்தைய ஆண்டு 1 லட்சத்து 23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்ட நிலையில் 5 ஆயிரத்து 152 கோடியே 6 லட்சம் திருப்பி அனுப்பப்பட்டது” என்று தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும், “2020-21இல் ரூ. 23 ஆயிரத்து 824 கோடியே 53 லட்சமும், 2019-20இல் ரூ. 34 ஆயிரத்து 517 கோடியே 7 லட்சமும், 2018-19இல் ரூ. 21 ஆயி ரத்து 043 கோடியே 75 லட்சமும் வேளாண்மை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
வேளாண்மை அமைச்சகத்தின் கீழ் வரும் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை, 2022-23ல் அதன் மொத்த ஒதுக்கீடான ரூ. 8 ஆயி ரத்து 658 கோடியே 91 லட்சத்தில் ரூ. 9 லட்சத்தை சரண்டர் செய்துள்ளது. மேலும் 2021-22-இல் ரூ. 1 கோடியே 81 லட்சத்தையும், 2020-21இல் ரூ. 600 கோடியையும், 2019-20இல் ரூ. 232 கோடியே 62 லட்சத்தையும், 2018-2019-இல் ரூ. 7 கோடியே 90 லட்சத்தையும் திருப்பி அனுப்பியுள்ளது. 2018-19 நிதியாண்டில், ‘பிரதமர் கிசான் சம்மன் நிதி’யை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியதன் மூலம், வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள இரு துறைகளின் ஒருங்கிணைந்த பட்ஜெட் 2018-19 இல் ரூ. 54 ஆயிரம் கோடியிலிருந்து (அல்லது மையத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 24 லட்சத்து 42 ஆயிரம் கோடியில் 2.3 சதவிகிதம்) ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் கோடியாக (அல்லது 2022-23இல் மொத்தத் தொகை ரூ. 39 லட்சத்து 44 ஆயிரம் கோடியில் 3.5 சதவிகிதம்) அதிகரித்துள்ளது.
இத்திட்டத்தின் ஆண்டு ஒதுக்கீடு கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 20 ஆயிரம் கோடி முதல் ரூ. 75 ஆயிரம் கோடி வரை உள்ளது. இதனையே காரணம் காட்டி, ஒன்றிய பாஜக அரசும் 2022-23இல் 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வேளாண் அமைச்சகத்திற் கான மொத்த ஒதுக்கீட்டை, 2023-24 நிதி யாண்டில் 1 லட்சத்து 25 ஆயிரம் கோடியாகக் குறைத்துள்ளது. அதுபற்றி யாராவது கேள்வி எழுப்பு வார்களே என்பதற்காக, “... நிதியை திரும்ப ஒப்ப டைக்கும் விவகாரத்தைப் பொறுத்தவரை, முக்கியமாக NES (வடகிழக்கு மாநிலங்கள்), SCSP (பட்டியல் சாதி துணைத் திட்டம்) மற்றும் பழங்குடியினர் பகுதி துணைத் திட்டம் (TASP) ஆகியவற்றின் கீழ் தேவை குறைவாக இருப்பதே காரணம்” என்று 2023 மார்ச் 13 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளா ண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மானியக் கோரிக்கை (2023-24) குழு மூலமாக ஒன்றிய அரசே விளக்கமும் அளித்துக் கொண்டுள்ளது.