ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஒன்றிய அரசின் குழு கடந்த செவ்வாயன்று நடத்திய கூட்டத்தில் நானும் எமது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பல் பாசுவும் பங்கேற்றோம். ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை முற்றிலும் ஜனநாயக விரோதமானது என்பதை உறுதிபட பதிவு செய்துள்ளோம். மேற்படி குழு, இந்தத் திட்டம் சாத்தியமானது என்று குறிப்பிட்டு ஒரு அறிக்கையை முன்மொழிந்தது. அந்த அறிக்கை முற்றிலும் தவறானது என்பதை வலுவான முறையில் குறிப்பிட்டோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மாண்பு களுக்கு முற்றிலும் முரணாக ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை உள்ளது. இது ஜனநாயக விரோதமானது, கூட்டாட்சிக்கு எதிரானது. சபையில் ஓர் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்ட பின்னரும் ஆட்சியில் நீடிக்கலாம் என்பது முற்றிலும் ஜனநாயக விரோதமானது.