india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மத்தியப்பிரதேசத்தின் மைஹார் மாவட் டத்தில் லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.

“மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் இறக்க மாட்டேன்”  என ஜம்மு-காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு நவம்பர் மாதம் 26ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்  படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது.

தில்லி நாக்லோவில் அதிவேகமாக சென்ற காரின் வேகத்தைக் குறைக்கக் கூறிய காவல்  ஆய்வாளர் சந்தீப் (30), கார் ஏற்றி கொல்லப்பட்டார். 

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிந்து விட்ட தாக பாஜக பிரச்சாரம் செய்து வரும் நிலை யில், கதுவாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குத லில் மாநில போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்.

“உண்மையான சமத்துவம் மற்றும் நீதி யை நிலைநாட்ட அரசியலில் பெண் களின் ஈடுபாடு அதிகளவில் தேவை” என மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலி யுறுத்தியுள்ளார்.

“ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கி ரஸ் தொண்டர்கள் “பாகிஸ்தான் ஜிந்தா பாத்” கோஷங்களை எழுப்புகின்றனர்” என ஒன்றிய  உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த 2 நாட்களுக்கு கேரளா - லட்சத்தீவு கடற்கரைக்கு மீன்பிடிக்க செல்ல  வேண்டாம் என மீனவர்களுக்கு இந்திய வானிலை  ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதி பதி மன்மோகன் ஞாயிறன்று பதவியேற்றார். தில்லி முதல்வர் அதிஷி கலந்து கொண்ட விழா வில், துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநி லத்தின் சிராலியில் 5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்த சுனில் கோர்கு (22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதராவில் மீண்டும் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலை யில், விஸ்வாமித்ரி ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ள நீர் பாய்ந்து வருகிறது. இதனால் வதோதரா மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாநில அரசு பெயரளவில் அறிவுறுத்தலை மட்டும்  வழங்கியுள்ளது.