india

img

சொத்து மதிப்பை மறைக்கும் பாஜகவினர்

மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டில் நடை பெறும் அனைத்து முறைகேடு சம்ப வங்களிலும் பாஜகவினரே முன்ன ணியில் உள்ளனர். அதாவது சர்வதேச நிதி முறைகேடு விவ காரங்களில் இருந்து சாதாரண உள்ளூர் குண்டுவெடிப்பு (ராமேஸ் வரம் கபே) சம்பவங்கள் வரை பாஜக வினர் இல்லாமல் எதுவும் நடைபெறு வது கிடையாது. அந்தளவுக்கு குற்றச்சம்பவங்களுக்கும் பாஜக வினருக்கும் மிக நெருக்கம் உள்ளது. இந்நிலையில், தேர்தல் வேட்புமனுக் கான சொத்து விவரம் அடங்கிய பிரமாணப் பத்திரத்திலும் பாஜக வினர் முறைகேட்டை அரங்கேற்றி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் பாஜக வேட் பாளராக போட்டியிடும் ஒன்றிய அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர் தேர்தல் ஆணையத்திடம் தனது சொத்து விவரம் அடங்கிய பிரமாண  பத்திரத்தில் ரூ. 36 கோடி  சொத்துக் கள் மட்டுமே இருப்பதாக கூறியுள் ளார். ஆனால் உண்மையில் ராஜீவ்  சந்திரசேகருக்கு சுமார் ரூ.8,000 கோடி சொத்துகள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்  மனுவும் அளித்துள்ளது. அதில், “ஒன்றிய அமைச்சர்  ராஜீவ் சந்திர சேகர் தனது சொத்து மதிப்பை  மறைத்து ரூ.36 கோடி சொத்து கள் மட்டுமே இருப்பதாக காட்டி யுள்ளார். ராஜீவ் சந்திரசேகர் காட்டி யுள்ள ரூ.36 கோடி சொத்துகளில் அவரது சொகுசுக் கார்கள், ஆடம்பர பங்களா போன்றவை இடம்பெற வில்லை. ஆனால் அவருக்கு சுமார்  ரூ.8,000 கோடி சொத்துகள் உள்ளன.   முக்கியமாக ராஜீவ் சந்திரசேகர் ரூ.6.3 கோடி என கணக்கு காட்டி யுள்ள 4 நிறுவனங்களின் மதிப்பு ஒன்றிய அரசின் இணையதளத்தில் ரூ.1,610 கோடி என கூறப்படுகிறது. இதுபோக சொந்தமாக விமானமும் வைத்துள்ளார். 

ராஜீவ் சந்திரசேகரின் சொத்து விவரங்கள் பல ஊடகங்களில் ஏற்கனவே வெளியாகி உள்ளன. ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் வேட்புமனுவில் தனது சொத்து  மதிப்பை பல மடங்கு குறைத்துக் காட்டியிருக்கிறார். அதனால் தவ றான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த ராஜீவ் சந்திரசேகர் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.ராஜீவ் சந்திரசேகர் போல பல்வேறு பாஜக வேட்பாளர்கள் தங்களது சொத்து மதிப்புகளை மறைத்து காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.