india

4 கட்டத் தேர்தலில் இதுவரை 45 கோடி பேர் வாக்களிப்பு!

புதுதில்லி, மே 16 - நாடு முழுவதும் இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட மக்களவை தேர்தல்களில் ஒட்டுமொத்த மாக 45 கோடி பேர் வாக்களித்திருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

18-ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறும் என  அறிவிக்கப்பட்டு, அதில், இதுவரை 4 கட்ட  வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. முதற்கட்டத் தேர்தலில் 21 மாநிலங்களில் உள்ள  102 தொகுதிகளும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதி களுக்கும், மூன்றாம் கட்ட தேர்தலில் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கும், நான்காம் கட்டத் தேர்தலில் 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், தெலுங் கானா, ஆந்திரா, குஜராத், மத்தியப்பிரதேசம், அருணாலப்பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் தேர்தல் முழுமையாக நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக் கான முதல் நான்கு கட்ட வாக்குப் பதிவில், தற்போது வரை 66.95 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன; இதுவரை 45 கோடியே 10  லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என்று  இந்தியத் தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது.

எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தல்களில் வாக்குப் பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தகுதி யுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் உரிய நேரத்தில் பூத் ஸ்லிப்புகளை வழங்கவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.