ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக கூறி தேசிய புலனாய்வு அமைப்பு சனியன்று அதிகாலை முதல் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களின் 44 இடங்க ளில் திடீர் சோதனை மேற்கொண்டது. இந்தச் சோதனையில் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கைதா னவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவா தக் குழுவின் கோட்பாடுகளை இந்தியா வில் பரப்ப முயற்சித்துள்ளதாக வும், ஐஇடி வெடிப்பொருட்களை தயாரிப்பதிலும் ஈடுபட்டதாகவும், நாடு முழுவதும் பயங்கரவாத சதிச்செயல் களில் ஈடுபடவிருந்ததால் கைது செய்யப்பட்டனர் என என்ஐஏ விளக்கம் அளித்துள்ளது.