தில்லியை முற்றுகையிட விவசாயிகள் பேரணியை தொடங்கிய நிலையில், ஹரியானா எல்லையில் விவசாயிகள் கைது செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் தில்லியை முற்றுகையிட பேரணியை தொடங்கிய நிலையில், பஞ்சாப்-ஹரியானா எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால், அங்கேயே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், ஒன்றிய அமைச்சர்கள் 4-ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் விவசாயிகள் தில்லியை முற்றுகையிட புறப்படுவார்கள் என்று விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
விவசாயிகள் தில்லிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், பலமான தடுப்புகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர்.
சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை தகர்ப்பதற்காக விவசாயிகள் ஜேசிபி வாகனங்களுடன் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் படையெடுத்துள்ள நிலையில், போலீசார் விவசாயிகள் கைது செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.