ஜார்க்கண்டிற்கு சுற்றுலா வந்திருந்த ஸ்பானிய நாட்டுப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 7 பேரில், 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்திற்குச் சுற்றுலா வந்திருந்த ஸ்பானிய நாட்டுப் பெண் குருமஹத் பகுதியில் நேற்று இரவு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, தன்னை இழுத்துச் சென்று ஆளில்லாத இடத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது வாகனத்தை வழிமறித்து இந்தப் பெண் உதவி கேட்டு நிறுத்தியிருக்கிறார். அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன. காவல்துறையினர் அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகக் கூறப்பட்டது.
பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.