india

img

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு: இமாச்சலில் அதானி குழும நிறுவனத்தில் ரெய்டு

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அதானி வில்மர் நிறுவனத்தில் ஜிஎஸ்டி விதிமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும்,அங்கு ஜிஎஸ்டி துறையின் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி 24-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம், அதன் நிறுவனங்களின் பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றி மோசடியில் ஈடுபட்டதையும், வரி ஏய்ப்பு செய்ததையும், அதன் அதிகபட்ச கடன் சுமைகள் பற்றியும் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக ஆய்வு செய்து 106 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டது.

பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுத்து அதானி குழுமத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பங்குசந்தையில் அதானி குழுமத்தின் பங்கு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், அதானி குழுமத்தின் மற்றொரு வீதிமீறல் செயல்பாடாக, அதானி வில்மர் குழுமத்தில் ஜிஎஸ்டி விதிமீறல் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள அதானி வில்மர் குழுமத்தில், மாநில கலால் வரித்துறையினர் சோதனை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.அதானி வில்மர் குழுமம் கடந்த 5 ஆண்டுகளாக ஜிஎஸ்டி விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அது தொடர்பாக அதானி வில்மர் குழுமத்தின் அலுவலகங்களுக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.