headlines

img

புதிய மசோதாக்கள் உள்நோக்கம் என்ன ?

பிரிட்டிஷ் இந்தியாவில் எப்போது சட்டம் இயற்றும் மன்றங்கள் உருவாக்கப்பட்டனவோ, அப்போதே கருப்புச் சட்டங்களும் உருவாக்கப் பட்டன. அந்தச் சட்டங்களுக்கு சுதந்திர இந்தியா வில் புதிய பெயர்கள் சூட்டப்பட்டு, அதே வீரி யத்தோடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

இந்தநிலையில் இந்திய தண்டனைச் சட்டம் 1860, இந்திய சாட்சியச் சட்டம்- 1872 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகிய குற்ற வியல் சட்டங்களை ரத்து செய்யும் நோக்கத்து டன், மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்று புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்தி யுள்ளது. வரும் கூட்டத்தொடரில் இதை நிறை வேற்ற முயற்சிக்கிறது.  

 குற்றவியல் சட்ட மசோதாவின் பிரிவுகளை ஒன்றிய பாஜக அரசு ரகசியமாக மாற்ற முயற் சிக்கிறது  என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு க்கு வலுச் சேர்க்கும் வகையில் அரசின் நகர்வு கள் உள்ளன. புதிய மசோதாவில் கும்பல் கொலை கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கான தண்டனை கள் சேர்க்கப்பட்டுள்ளதாக  நாடாளுமன்றத்தில் அரசு  கூறினாலும், ஏற்கனவே இத்தகைய குற் றங்களுக்கு உள்ள தண்டனையை குறைக்க  முயற்சிக்கிறது. 

கும்பல் படுகொலைகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி)  பிரிவு 302  (கொலை) இன் கீழ் இருந்தது.  அத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை விதிக்கமுடியும். புதிய மசோதா, கும்பல் படு கொலை வழக்கில் கொலைக் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு ஏழு ஆண்டு தண்டனை வழங்கினால் போதுமானது என்கிறது. கடு மையான குற்றத்திற்குரிய தண்டனையை  ஏழு வருடங்களாக குறைப்பதன் மூலம் குற்றவாளி களுக்கு பெரும் “சலுகையை” வழங்குகிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்ட விதிகள் இருப்பதால், புதிய மசோதாவின் கீழ் வெறுப்பூட்டும் பேச்சுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்படுமாம். வேறு தண்டனை கிடையாதாம். ஐபிசி 376வது பிரிவு பாலியல் வல்லுறவுக்கு ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்குகிறது.   ஐபிசி 375வது பிரிவு பாலியல் வல்லுறவு குற்றத்தையும், வல்லுறவு என்றால் என்ன என்பதையும் வரை யறுக்கிறது. புதிய சட்டத்தில் “மணவாழ்வு” விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. “ஒரு ஆண் தனது மனைவியுடன், அல்லது 18 வயதுக்கு குறை வான பெண்ணிடம் வலுக்கட்டாயமாக உடலு றவு கொள்வது வல்லுறவு ஆகாது என்கிறது. 

ஒருபக்கம், காலனியாதிக்கத்தை நினை வூட்டும் வகையில் இருப்பதால் சட்டத்தை திருத்துகிறோம் என்று கூறும் ஒன்றிய பாஜக அரசு தங்களுக்கு ஏற்ற வகையில் சட்டங்களை திருத்த முயற்சிக்கிறது. மறுபக்கம் காலத்திற்கு ஏற்றார்போல் பல்வேறு சட்டங்களின் விதிக ளில் கொண்டுவரவேண்டிய மாற்றங்கள் பலவும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.