கடந்த மூன்றாண்டு காலத்தில் இந்திய மக்களிடமிருந்து ரூ.8 லட்சம் கோடி அளவிற்கு அரசாங்கமே அதி பயங்கர கொள்ளையை அரங் கேற்றியிருப்பதை நாடாளுமன்றத்தில் எள்ளள வும் வெட்கமின்றி ஒப்புக் கொண்டிருக்கிறார் நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன். பெட்ரோல், டீசல் மீதான வரிகளின் மூலமாக மூன்றே ஆண்டு களில் இத்தனை பெரிய சூறையாடலை நடத்தி யிருக்கும் மோடி அரசு, அதிலும் குறிப்பாக 2020-21 ஒரே ஆண்டில் மட்டும் ரூ.3.71 லட்சம் கோடிக்கு மேல் மக்களின் பாக்கெட்டுகளிலிருந்து அப கரித்துள்ளது.
2018 அக்டோபர் 5 அன்று பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூ.19.48ல் இருந்து ரூ.27.90 ஆக அதிகரித்தது. டீசல் மீதான கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூ.15.33 லிருந்து ரூ.21.80 ஆக அதிகரித்தது. அப்போது முதல் தொடர்ந்து அதிகரித்து 2021 பிப்ரவரி 2 அன்று பெட்ரோல் மீதான வரி ரூ.32.98 ஆகவும், டீசல் மீதான வரி ரூ.38.83 ஆகவும் அதிகபட்ச நிலையை எட்டியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி எந்த விதத்திலும் இந்திய மக்களுக்கு பலன் கிடைக்கும் விதத்தில் செய்யப்படவில்லை. மாறாக, அந்த விலை வீழ்ச்சி அரசுக்கும், அதன்மூலமாக அரசின் கூட்டுக் களவாணிகளான பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் சாதகமாக மடைமாற்றம் செய்யப்பட்டது.
ஒருபுறம் மக்களிடமிருந்து பெட்ரோல், டீசலில் மட்டும் ரூ.8 லட்சம் கோடி கொள்ளை; மறுபுறம் ஏழு ஆண்டு கால மோடி ஆட்சியில் இந்திய மக்களின் ரத்தமும், வியர்வையும் உழைப்பாக செலுத்தப்பட்டு சிறுக, சிறுக சேமிக் கப்பட்ட வங்கிகளின் இருப்புத் தொகைகளிலி ருந்து பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் கொடுத்து, வராக் கடன் என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்ட தொகை மட்டும் ரூ.10.7 லட்சம் கோடி. இதில் கடந்த ஒரே நிதியாண்டில் மட்டும் (2020-21) ரூ.2.02 லட்சம் கோடி வராக்கடனாக தள்ளு படி செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்திய பொதுத்துறை வங்கிகளில் பெரு முதலாளிகள் வாங்கிய கடன் ரூ.11லட்சத்து 68 ஆயிரத்து 95 கோடி முற்றாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது வரை கடன் தள்ளுபடி பட்டியலையோ, கடன் வாங்கியவர்களின் பெயரையோ வங்கி நிர்வாகங்க ளோ, அரசோ வெளியிடவில்லை.
இந்திய உழைப்பாளி மக்களின் கைகளிலி ருந்து நம் கண் முன்பே ஒட்டுமொத்த செல்வமும் பெரு முதலாளிகளின் கைகளுக்கு எந்தளவிற்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது என்பதற்கு இந்த இரண்டு உதாரணங்களே போதுமானவை. இவை தவிர தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் ஒட்டு மொத்த பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக் களும் சூறையாடப்படும் நடவடிக்கைகள் அரங் கேறவுள்ளன. குத்தகை என்ற பெயரிலோ, நட்டம் என்பதால் விற்பனை என்ற பெயரிலோ, பங்கு விற் பனை என்ற முறையிலோ இந்திய பொதுத்துறைக்கு முற்றாக மூடுவிழா நடத்துகிறது மோடி அரசு.
இந்த பின்னணியில்தான் இன்றைய தினம் (டிசம்பர் 16) துவங்கும் வங்கி ஊழியர் - அதிகாரிக ளின் ஆவேசமிக்க வேலைநிறுத்தப் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. வெல்க அவர்களது எழுச்சி.