headlines

img

இது கருப்பு அத்தியாயம்

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு செல் வதால் இந்த மாதம் முன்கூட்டியே மனதின் குரல் நிகழ்ச்சியை முடித்து விட்டார். அதில் இந்தியா வில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமல் படுத்தப்பட்ட அவசர நிலை காலகட்டம் இந்திய வரலாற்றில் கருப்புப் பக்கமாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். உண்மைதான். ஆனால் இவரது ஒன்பதாண்டு கால ஆட்சி கருப்பு அத்தியாயமாக அல்லவா அமைந்திருக்கிறது.

ஜனநாயகத்தின் தாய் இந்தியா. நாட்டில் அரசமைப்புச் சட்டத்திற்கே அதீத முக்கியத்து வம் அளிக்கப்பட்டு வருகிறது என்று மன சாட்சியே இல்லாமல் பேசியிருக்கிறார். நாடாளு மன்ற அவைகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்க ளை பேச விடாமல் செய்வதும், அதானி போன்ற வர்களின் ஊழல் முறைகேடுகளை அம்பலப் படுத்தும் முயற்சிகளுக்கு தடையாக நாடாளு மன்றத்தை ஆளும் கட்சியே முடக்குவதும்தான் இவர்களது ஜனநாயக அதீத முக்கியத்துவ நடைமுறையா? 

நாட்டில் எத்தனையோ முன்னுரிமை பிரச்ச னைகள் இருக்கும் போது நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதுதான் மோடிக்கு முன்னு ரிமையாகிப்போனது. அந்தக் கட்டடத்திலும் ஜனநாயக அடித்தளங்களுக்கான அடையா ளங்களே இல்லாமல், விடுதலைப் போராட்ட விழுமியங்கள் உணர்த்தப்படாமல் மனுஸ்மிருதி யையும், சாணக்கியனையும் முன்னிலைப்படுத்தி வேத, புராணக் காட்சிகளை நிர்மாணித்து உள்ளதுதான் அரசியல் சட்ட மாண்புகளை காக்கும் லட்சணம் போலும். 

அரசியல் சட்டத்தின் இடத்தில், பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வுகளை கடைப்பிடிக்கும் சனாதன மனுதர்மத்தைத்தான் வைத்திடஇவரது அரசு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முயற்சித்து வருகிறது. அதற்காக அனைத்துத் துறைகளிலும் குறிப்பாக கல்வித்துறையில் அதனை புகுத்தி வருகிறது. இதுதான் அரசியல் சட்டத்திற்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பதோ?

அவசர நிலையின்போது ஜனநாயகத்தை ஆதரித்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர் என்று கூறியிருக்கிறார். உண்மைதான். அன்றைய மிசா  வழியில் வாஜ்பாய் ஆட்சியில் பொடா, இப்போது உபா என்று இவர்களது சட்டங்களுக்கு என்ன பெயர் சொல்வது? இவரது ஆட்சியில் எதிர்க் குரல் எழுப்புபவர்களை என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையின் மூலம் சிறையில் தள்ளுவதும், வெளி வர முடியாத  நிலையை ஏற்படுத்துவதும் துன்புறுத்தல் இல்லையா? பீமாகோரேகான் வழக்கில் ஸ்டேன் பாதிரியார் சிறையிலேயே உயிரிழந்தது எந்த வகை?

அவசர நிலைக் காலத்தில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு, தணிக்கை நடத்துவது வழக்கம். ஆனால் இப்போது இவரது அறிவிக்கப்படாத அவசர நிலைக்காலத்தில் ஊடகங்களை கட்டுப் படுத்துவதற்காக நிர்வாக உத்தரவு மூலம் திருத் தம் செய்து பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி) மூலம் முடக்குவது ஊடக சுதந்திரமா? மோடிக்கு எதிரான தகவல்களை கொண்ட ஆவணப் படத்தை வெளியிட்டதற்காக பிபிசி நிறுவனத்தில் ரெய்டு நடத்தியது எந்த வகை யிலானது? எதேச்சதிகாரம் இல்லையா?