மணிப்பூரை தொடர்ந்து பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் வன்செயல்கள் தொடர்ந்து வருகின்றன. வன்முறை வெறி யாட்டத்தால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஹரி யானாவை ஆளும் பாஜக அரசு கலவரத்திற்கு காரணமான விஎச்பி குண்டர்கள் மீது நட வடிக்கை எடுப்பதற்கு பதிலாக அப்பாவி முஸ்லிம் மக்களின் கடைகள், ஹோட்டல்களை தேடித் தேடி இடித்து வருகிறது.
உ.பி., மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்குச் சொந்தமான வீடுகள், கடைகளை புல்டோசர் கள் மூலம் இடித்துத் தள்ளுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது பாஜக அரசு. புதுதில்லியிலும் நீதிமன்ற உத்தரவை மீறி ஏழை, எளிய இஸ்லா மிய மக்களின் குடிசைகளை இடித்துத் தள்ள முயன்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் புல்டோசர் முன்பு நெஞ்சு ரத்துடன் நின்று இதயமற்ற அந்த அரசு எந்தி ரத்தை பின்வாங்கச் செய்தார்.
மணிப்பூரில் நீடிக்கும் வன்செயல்களைத் தடுக்க ஒன்றிய அரசோ, மாநில பாஜக அரசோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் வந்து விளக்க மளிக்கக் கூட பிரதமர் மோடி தயாராகயில்லை. அந்த மாநிலத்தில் புதிய பகுதிகளுக்கு கலவரம் பரவுகிறது.
இந்தநிலையில் ஹரியானா மாநிலத்திலும் இந்துத்துவா பயங்கரவாதிகள் கலவரத்தை ஏற் படுத்தியுள்ளனர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் இரண்டு முஸ்லிம்களை கொலைசெய்த மோனு மனோசர் விஎச்பி ஊர்வலத்தில் பங்கேற்க இருப்பதாக வெளியான தகவல்தான் கலவரத் திற்கு காரணம். அதேபோல மற்றொரு பயங்கர வாதியான பிட்டு பஜ்ரங்கி என்பவர் வெளியிட்ட காணொலியும் பதற்றத்தை அதிகரித்தது.
ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபட்ட விஎச்பி உள்ளிட்ட இந்துத்துவா தீவிரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல்கள், வீடுகள், மாநில அரசினால் இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன. ஏற்கெ னவே அச்சமடைந்துள்ள சிறுபான்மை மக்களை மேலும் அச்சுறுத்துவதாகவே மாநில அரசின் நடவடிக்கை உள்ளது. ஒன்றிய அரசும் ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்பது போல வேடிக்கை பார்க்கிறது.
இடிக்கப்படும் கட்டிடங்கள் சட்டவிரோத மாக கட்டப்பட்டவை என மாநில அரசு கூறு கிறது. முஸ்லிம் மக்களின் கட்டிடம் மட்டும்தான் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதா? பாஜகவை சேர்ந்த ஒருவரது கட்டிடம் கூட இடிக்கப்படவில்லைேய ஏன்? அதிகாரத்தை கையில் வைத்துள்ள மமதையில் பாஜக மாநில அரசுகள் இடித்துக் கொண்டிருப்பது வீடுகளை அல்ல, மதச்சார்பற்ற இந்த நாட்டை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுப்பது தேச பக்தர்களின் உடனடிக் கடமையாகும்.