இராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததாக கூற முடியாது என நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை இணை யமைச்சர் ஜிஜேந்திர சிங் கூறியுள்ளார்.
18 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய வரலாறு என்பதால் ராமர் பாலம் பற்றி துல்லியமாக கண்ட றிய முடியவில்லை என்றும் செயற்கைக்கோள் படங்களில் கடலில் சில பாறைகள் இருப்பது கண்டறியப்பட்ட போதும் அதை ராமர் கட்டிய பாலம் என்று கூறுவது கடினம் என்றும் தெரி வித்துள்ளார்.
அமைச்சர் தன்னுடைய பதிலில் 18 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய வரலாறு என்று கூறியி ருப்பது பொருத்தமல்ல. புராணக் கதைகள் வர லாறு ஆகாது. மேலும் ராமர் கட்டிய பாலம் இரா மேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருந்ததாகக்கூறி சேது சமுத்திர திட்டத்தை தடுத்தது குறித்து கேள்வி எழும் என்பதால் அமைச்சர் சாதுரியமாக 56 கிலோமீட்டர் நீளத் திற்கு பாலம் இருந்ததாக நாம் நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
நம்பிக்கை என்பது வேறு, அறிவியல் உண்மை என்பது வேறு. அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்த பலரும் ராமர் கட்டிய பாலம் என்று கூறப்படும் எந்தக் கட்டுமானமும் இல்லை என ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார்கள். எத்தனை ஆய்வு கள் நடத்தினாலும் ராமர் பாலம் குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாது.
ஆனால் ஆர்எஸ்எஸ் பரிவாரம் அமெரிக்கா வின் நாசா படம் பிடித்து அனுப்பிவிட்டது என்றெல் லாம் கூறி துவக்கப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை முடக்கி விட்டார்கள். இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் ஒன்றிய ஆட்சிப்பொறுப்பில் ஐக்கிய முன்னணி அரசு இருந்தபோது மதுரையில் சேது சமுத்திரத்திட்ட துவக்க விழா நடைபெற்று பணி களும் துவங்கின. ஆனால் பாஜகவினர் தொடர்ந்து செய்த ரகளை மற்றும் உச்சநீதிமன்றத்தில் சுப்பிர மணியசுவாமி தொடர்ந்த வழக்கு ஆகியவற்றால் ஒரு அருமையான திட்டம் பாழ்படுத்தப்பட்டுவிட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட அறிவியல் உண் மைகளை கணக்கில் கொள்ளாமல் நம்பிக்கை யின் அடிப்படையில் மாற்று வழியை யோசிக்கு மாறு கூறியதும், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பாஜக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஆர்வம் காட்டா ததும் சேது சமுத்திரத்திட்டத்தில் மண்ணள்ளி போட காரணங்களாக அமைந்துவிட்டன.
நம்பிக்கை என்ற பெயரில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கையும் கூட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அணுகினர். இப்போது ராமர் பாலம் இல்லை என்று ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டுள்ள நிலையில், சேது சமுத்திரத்திட்டம் மீண்டும் துவக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது? அரசும் நீதித்துறையும் சட்டம் மற்றும் அறிவியல் உண்மைகளை அளவீ டாகக் கொள்ளாமல் புராணங்கள், புனைவுகள், வெறும் நம்பிக்கைகள் ஆகியவற்றை அளவுகோ லாகக் கொண்டால் மேலும் மேலும் விபரீதமே விளையும்.