இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மத நல்லிணக் கத்திற்கும், மக்கள் ஒற்றுமைக்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் நாடு என்கிற உலக மக்களின் நம்பிக்கையின் மீது பாஜகவினரின் வெறுப்புணர்வு பிரச்சாரம் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்தி யுள்ளது. இதனால் உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர்களின் பொறுப்பற்ற, அருவெறுப்பான கருத்துக்களால் மட்டும் ஒரே நாளில் இந்த நிலை ஏற்பட்டுவிடவில்லை.
கண்ணியத்திற்குரிய முகம்மது நபிக்கு எதிராக பாஜகவினரின் அவதூறுப் பிரச்சாரம் என்பது அவர்கள் தொடர்ச்சியாக செய்து வந்துள்ள வெறுப்புப் பிரச்சாரத்தின் நீட்சியே ஆகும்.
பல்வேறு அரபு நாடுகளில் இந்தியப் பொருட் களை புறக்கணிப்போம் என்ற நிலைபாடு எடுக்கப் பட்டுள்ளதோடு, இந்தியத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள் ளது. அரபு நாடுகளில் பணியாற்றி வரும் 35 லட்சத் திற்கும் மேற்பட்ட இந்தியர்களின் வேலைவாய்ப்பு என்னவாகுமோ என்ற கவலை அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
பாஜகவினர் மீது அந்த கட்சி தலைமை எடுத்துள்ள நடவடிக்கை வெறும் கண்துடைப்பே ஆகும். இத்தகைய வெறுப்புப் பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் - பாஜக வகையறா தொடர்ந்து திட்ட மிட்டு முன்னெடுத்து வந்துள்ளது.
உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச் சாரக் கூட்டங்களில் பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சர், அந்த மாநில முதல்வர் உள்ளிட்டோர் இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தும் வகை யிலும் மதப் பகைமையை தூண்டி வாக்கு அறு வடை நடத்தும் வகையிலும் பேசியதை நாடறியும்.
ஒன்றிய பாஜக கூட்டணி அரசு கொண்டு வந்த குடி யுரிமைச் சட்டம் கூட மதவெறுப்புணர்வை அடிப்ப டையாக கொண்டதுதான். இஸ்லாமிய மக்களின் உணவு, உடை, பண்பாடு, பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் குறிவைத்து அவர்கள் தாக்குதல் தொடுத்தனர். முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற் காக உணவின் பெயரால் படுகொலை கூட சங் பரி வாரத்தினால் நடத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் நடந்த மதரீதியான படுகொலைகள் என்பது அவ்வ ளவு எளிதில் மறந்துவிடக் கூடியதல்ல.
இவையெல்லாம் ஆர்எஸ்எஸ் திட்டத்தின் படியே நடைபெறுகிறது. சிறுபான்மை இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்பட வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் கோட்பாடு ஆகும். அவர்களால் கொஞ்சம் கொஞ்சமாக ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெறுப்பு நெருப்பு இப்போது கொழுந்துவிட்டு எரிகிறது.
அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் பாஜகவினரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரி வித்து வருவதால் தற்போது பதுங்குவதுபோல பாவலா செய்கின்றனர். உண்மையில் இந்திய மக் கள் அனைவரும் மதச்சார்பின்மையை, மத நல்லி ணக்கத்தை, மக்கள் ஒன்றுமையை உயர்த்திப் பிடித்து பாஜக பரிவாரத்தை எதிர்த்து போராட வேண்டும். அப்போதுதான் மதவெறியர்களின் கருத்துக்கு எதி ராகவே மதச்சார்பற்ற இந்தியா நிற்கிறது என்பது உலக அரங்கில் வெளிச்சமெனத் தெரியும்.