மொத்த விலைவாசி குறியீடு இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. 2021 மார்ச் மாதம் மொத்த விலைக் குறியீடு 7.89 சதவிகிதமாக இருந்தது. இந்தாண்டு மார்ச் மாதம் 14.6 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதன் விளைவு அத்தியாவ சியப் பொருட்களின் விலை பன்மடங்கு கூடியி ருக்கிறது. இது மேலும் மக்களின் மீது தாங்க முடி யாதளவு சுமையை ஏற்றியிருக்கிறது. இது ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கையின் படுதோல்வியாகும்.
உணவு தானியங்கள், பெட்ரோலியப் பொருட் கள், உற்பத்திப் பொருட்கள், இடை நிலைப் பொருட் கள் உள்ளிட்ட சுமார் 5500 பொருட்களின் மொத்த விலைகளிலிருந்து இந்த குறியீடு கணக்கிடப்படு கிறது.மொத்த விலைக் குறியீட்டு உயர்வால் , நுகர்வோர் விலைக் குறியீடும் உயரும். அதன் மூலம் பணவீக்கமும் உயர்கிறது.
உதாரணமாக இதுவரை ரூ.100க்கு வாங்கிய பொருட்கள், இனி ரூ.120 கொடுத்தால்தான் கிடைக்கும். ஆனால் தொழிலாளர்களின் கூலியோ, பணியாளர்களின் ஊதியமோ உயராது. அப்போது மக்கள் அதே 100 ரூபாய்க்கு வாங்கும் பொருளின் அளவை குறைத்து வாங்குவார்கள். அதாவது பொதுமக்களின் வாங்கும் சக்தி குறை யும். வாங்கும் சக்தி குறையும் போது, உற்பத்தி தேக்கம் ஏற்படும். அதனைத் தொடர்ந்து உற்பத்தி யும் குறையும். இந்தப் பொருளாதாரச் சுழற்சியின் பாதிப்பு வெகுமக்களை மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தையே பாதிக்கும். அப்படியான பாதிப்பைத்தான் இந்தியப் பொருளாதாரம் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கூட மோடி அரசிற்கு மக்க ளைத் துன்பத்திலிருந்து மீட்க மனம் வரவில்லை. மாறாகத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் 2021ல் மட்டும் ரூ.4 லட்சத்து 52 ஆயிரம் கோடியை மக்கள் பாக்கெட்டிலி ருந்து பறித்திருக்கிறது. ஆனால் மறுபுறம் மோடி யின் நெருங்கிய நண்பரும், ஆர்எஸ்எஸ் ஆதர வாளருமான அதானிக்கு அரசின் பணத்தை வாரி வாரி இறைக்கிறது. அதானியின் நவிமும்பை விமான நிலையத்தின் ரூ.12 ஆயிரத்து 770 கோடி வராக்கடனை, ஸ்டேட் வங்கி மூலம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதன் மூலம் மீண்டும் ஒன்றிய அரசு காவி சார்பு கார்ப்பரேட் நல அரசு என்பதை நிரூபித்திருக்கிறது.
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளா தாரத்தை எட்டப் போவதாகப் பொய் நெல்லைக் குத்தி பொங்கல் வைக்க பாஜக வகையறாக்கள் முயல்கின்றனர். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் சந்தை முதலீடுகளில் வந்த அந்நிய முதலீடு 40 பில்லியன் டாலரில் , 14 பில்லியன் டாலர் கடந்த மூன்றே மாதங்களில் வெளியேறியிருக்கிறது. இதுதான் இந்தியாவை மோடி 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் லட்சணம்.
மோடி அரசின் தொடர் தோல்விகளை திசை திருப்ப மக்களிடையே மதக்கலவரங்களை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பல் திட்டமிட்டு உரு வாக்கி வருகிறது. இது சிறுபான்மையினரை மட்டு மல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் சீர்குலைப் பதை நோக்கி இட்டுச் செல்லும். தேசத்தையும் மக்களையும் பாதுகாக்க மோடி அரசை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றிட அனைவரும் ஒன்றிணைவது அவசியம்.