headlines

img

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவு உணர்த்தும் பாடம்

உ.பி., உத்தர்கண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளை  தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தல் முடி வுகள் வெளியாகியுள்ளன. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும், உ.பி. உள்ளிட்ட ஏனைய மாநிலங்க ளில் பாஜகவும் ஆட்சியமைக்கின்றன. தேசத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கவலையோடு பார்க்க வேண்டிய வெற்றியாக பாஜகவின் வெற்றி அமைந்துள்ளது. ஜனநாயக நெறிமுறைகளை நாசம் செய்யும் வகையில் பாஜக பரிவாரம் மேற் கொண்ட வெறுப்புப் பிரச்சாரம் வெற்றி பெறுவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல. 

குறிப்பாக உ.பி.,யில் கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சி அனைத்துத்துறைகளிலும் தோல்வி யடைந்தது. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு என எந்த ஒரு துறையிலும் பாஜக ஆட்சியில் சாதனை நிகழ்த்தப்படவில்லை. மாறாக, அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் மிகவும் மோசமான நிலையில் உ.பி., மாநில சமூக நிலையும், பொருளாதார நிலையும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

மேலும் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பெண் கள், குழந்தைகள், தலித் மற்றும் பழங்குடி மக்கள், சிறுபான்மையோருக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலை ஏற்பட்டது. காதல், உணவு, உடை என அனைத்திலும் தலையிட்டது உ.பி. அரசு. பசு மாமிசத்திற்காக அப்பட்டமான கொலைகள் நிகழ்த்தப்பட்டதோடு, ஆட்சியாளர்களாலேயே குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டார்கள். 

இதையெல்லாம் மூடி மறைக்க ராமர் கோவில் கட்டுவதையே தன்னுடைய சாதனையாக முன்னி றுத்தியது பாஜக. அயோத்தி மட்டுமின்றி, காசி, மதுரா என பல்வேறு தேவையற்ற சர்ச்சைகளை எழுப்பி மதரீதியான பகைமையை கூர்மைப்படுத்தி னர். இதன் உச்சமாக உ.பி.,யில் நடைபெறவுள்ள தேர்தல் 80 சதவீதத்திற்கும், 20 சதவீதத்திற்கும் இடை யிலான மோதல் என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார். பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களின் பேச்சுக்களும் இதற்கு சளைத்ததாக இல்லை. 

அவர்கள் திட்டமிட்டது போலவே மக்களை பிளவுபடுத்தி அதன்மூலம் வெற்றி பெற்றுள்ளனர். எனினும் கடந்த தேர்தலை விட பாஜகவின் இடங் கள் குறைந்துள்ளன. எதிர்க்கட்சிகள் தனித்தனி யாக நின்றதும் அந்தக் கட்சிக்கு சாதகமாக அமைந் துள்ளது. தேர்தல் நடந்த காலத்தில் பல்வேறு முறை கேடுகளில் பாஜகவினர் ஈடுபட்டதாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடை பெற்றுள்ள இந்த தேர்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றியை அலட்சியப்படுத்தி விடக்கூடாது. பஞ் சாப்பில் காங்கிரஸ், அகாலிதளம் ஆகிய கட்சி களை பின்னுக்குத்தள்ளி ஆம்ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் பலன்  அந்தக் கட்சிக்கு சென்றுள்ளது. ஐந்து மாநிலங்களி லும் காங்கிரஸ் பரிதாபமான இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. அக்கட்சியின் தலைமை ஒரு ஆழ மான பரிசீலனையை மேற்கொள்ள வேண்டும். மறுபுறத்தில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திக ளிடையே ஒற்றுமை வளர்வது காலத்தின் தேவையாகும்.