headlines

img

வசூலா? வாரி வழங்கலா?

‘பயிர் பாராமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது’ என்பது கிராமப்புற பழமொழி. அது போல்தான் உள்ளது இன்றைய ஒன்றிய ஆட்சி யாளர்களின் கடன் வசூல் நடவடிக்கைகள். ஆனால் அவர்களின் வாய் அளப்பு வார்த்தை களுக்கு குறைவேயில்லை.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கள் ஆட்சியில்தான் வாராக்கடன் வசூலை நடத்தியிருக்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வங்கிகளின் வாராக் கடனை வசூலிக்க நட வடிக்கை எடுக்கவில்லை என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார். 

இவர்களது ஆட்சியின் வாராக்கடன் வசூல்  லட்சணத்தை பார்த்தால் தான் தெரியும் எப்படி வசூலித்திருக்கிறார்கள் என்பதை. வங்கிகளில் சாதாரண விவசாயிகள் சிறு தொழில் உரிமையாளர் கள் வாங்கிய கடன்களை வசூலிப்பதில் காட்டும் தீவிரம் பெரு முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது காட்டுவதே இல்லை என்பது நாடறிந்தது. 

2014இல் மோடி அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னர் இருந்த வாராக் கடன்கள் தள்ளுபடி நிலை மையும் இப்போதைய அரசின் வாராக்கடன் தள்ளுபடி நடவடிக்கைகளையும் பார்த்தால் தான் இவர்களது வசூல் லட்சணம் புரியும். காங்கிரசின் பத்தாண்டு கால ஆட்சியில் செய்யப்பட்ட வங்கி கடன் தள்ளுபடியை விட மோடி ஆட்சியில் செய் யப்பட்ட தள்ளுபடி மூன்று மடங்கு அதிகமாகும். அதாவது 2015 - 2019 காலத்தில் செய்யப்பட்ட தள்ளுபடி ரூ.7.94 லட்சம் கோடியாகும். 

இவர்களது வசூல் நடவடிக்கைக்கு ஒரு குஜ ராத் உதாரணத்தை பார்ப்போம். ஏபிஜி எனும் கப்பல் கட்டும் நிறுவனம் 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் பெற்று மோசடி செய்திருக்கிறது. இதுவே இதுவரை நடந்த வங்கி மோசடிகளில் மிகப் பெரிய தாகும். இதன் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண் டிய ஒன்றிய அரசு கள்ள மவுனம் காட்டியது ஏன்?  இதற்கு நிதியமைச்சருக்கு பொறுப்பில்லையா?

ஆனால் இவர்கள் முந்தைய ஆட்சியை குறை சொல்லி தப்பித்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். 8 ஆண்டு காலமாக இவர்கள் செய்தது என்ன? பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பிச்  சென்றவர்கள் 51 பேர். ஆனால் மோடி ஆட்சியின் முதல் ஐந்து ஆண்டுகளில் மட்டும் வெளிநாடு களுக்கு தப்பிச் சென்றவர்கள் 38 பேர். இவர்களின் ஆதரவின்றி அவர்களால் எப்படி தப்பிச் செல்ல முடிந்தது?

தப்பிச் சென்றவர்களில் ஒருவரான முகுல் சோக்சி, நான் இந்தியாவிலிருந்து புறப்படும் முன்பு எனக்கு எதிராக கைது வாரண்ட் எதுவும் பிறப் பிக்கப்படவில்லை என்று டொமினிக்கன் நாட்டு நீதிமன்றத்தில் கூறினார். அப்படியானால் ஒன்றிய ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்குமா? இதற்கு ஒன்றிய நிதியமைச்சர் என்ன காரணம் சொல்வார்? 

இன்னொரு விஷயம் ஜெட் ஏர்வேஸ் நிறுவ னம் வாங்கிய கடனோ ரூ.7,807 கோடி. அவர்களி டம் வசூலித்த தொகை வெறும் ரூ.365 கோடி. அவர்க ளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது 95 சதவீத கடன் தொகை. இதுதான் இவர்களின் வாராக் கடன் வசூல் லட்சணம். மக்களின் பணம் வங்கிகளில் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் மோடி அரசின் கார்ப்பரேட் கூட்டுக் களவாணித்தனம் ஒழிக்கப் படுவது அவசியம்.